Saturday 30 April 2016
பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு
Wednesday 27 April 2016
தேவதைகளின் அட்டகாசம் - 5
நான் பாத்ரூமில் குளிக்கனும். நீ வெளியே உள்ள பாத் டேப்பில் (BATH TAP) குளின்னு சொன்னேன். அவன் அதெல்லாம் முடியாது. பாத்ரூமில் தான் குளிப்பேன்னு சொன்னான்.
ம்.....
ம்....
ம்.....
உடனே ”பன்னாடை”ன்னு ரொம்ப அசிங்கமா சொல்றான் டாடி.
ம்.....
Saturday 23 April 2016
நினைவுகளை ஏந்திச் செல்லும் மனது!
தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.
முன்பு நான் எழுதிய ஒரு கவிதையின் அடுக்கக வரிகளுக்குப் பொருத்தமாய் பொருளாதாரத்திற்காக வேலை செய்ய வந்தடைந்த சிங்கப்பூரை விட்டு நாளை (24-04-2016) கிளம்புகிறேன். இப்படிக் கிளம்புவது இரண்டாவது முறை. புலம் பெயர் வாழ்வில் ஊர் எல்லைகள் தாண்டிய நட்பு வாய்க்கும். கொடுப்பினை இருந்தால் அது தொடரும். எனக்கு அப்படியான கொடுப்பினை அதிகம். அதனாலயே தேசம் கடந்து திரியும் நண்பர்களிடம் நேரடித் தொடர்புகள் இல்லாத போதும் நண்பர்கள் சூழ் உலகில் ஒரு ஒளிக்கற்றையாய் இன்றளவும் என்னால் பயணித்துக் கொண்டிருக்க முடிகிறது.
Thursday 21 April 2016
Tuesday 19 April 2016
மாலனும் - நாங்களும்
புத்தகங்களில், வார இதழ்களில், நாளிதழ்களில், நேர்காணல்களில் அறிந்திருந்த மாலன் அவர்களின் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பு சனிக்கிழமை (16-04-2016) கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாலன் கலந்து கொள்ளச் சிங்கப்பூர் வந்திருந்தார். அவருக்குச் சிங்கப்பூர் வருகை முதன்முறை அல்ல, ஆனால் எனக்கோ அவரின் பேச்சை நேரில் கேட்கக் கிடைத்த முதல் வாய்ப்பு! அதனால் தவறவிடக்கூடாது என நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி நடந்த உமறுப்புலவர் அரங்கில் அரங்கமே அதிரும்படியாக காலி இருக்கைகள் சூழ பதினைந்து நூல்களின் வெளியீட்டு விழாவில் இதற்கு முன் கலந்து கொண்டிருந்தேன். இம்முறை அப்படியான துர்பாக்கியம் ஏதும் நிகழ்ந்து விடாமல் அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது, பலரும் இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தனர், நல்ல சுவரோர படித்துறையாகப் பார்த்து நான் உட்கார்ந்து கொண்டேன். மேடைப் பேச்சுக்கான எந்த அலங்காரமுமின்றி தனக்குத் தரப்பட்டிருந்த தலைப்பை ஒட்டிய பேச்சாக மட்டுமே அவரின் பேச்சு இருந்தது.