வீட்டில் தனக்கு மதிப்பிருக்கிறதோ இல்லையோ தன் சொல்லுக்கு மதிப்பிருக்க வேண்டும் என நினைப்பவள் மனைவி. தான் சொல்வதைக் கணவன் காது கொடுத்துக் கேட்டாலே தனக்கு மதிப்பும், மரியாதையும் குடும்பத்தில் இருப்பதாக அவளுக்கு ஒரு நினைப்பு! மனைவியின் இந்த நினைப்பு பல வீடுகளில் நிறைவேறாமலே நீர்த்துப் போய்விடுகிறது. காரணம், மனைவி சொல்வதை, பேசுவதை எந்தக் கணவனும் காது கொடுத்துக் கேட்பதில்லை. இரசிப்பதில்லை. காதல் மனைவியாக இருந்தால் கூட திருமணத்திற்கு முன் கற்கண்டாய் இனிக்கும் அவள் பேச்சு திருமணத்திற்கு பின் பாகற்காயாய் கசக்கிறது கணவனுக்கு!