விபிஷணன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை அடுத்து “காசிவிசுவநாதர் லிங்கம்” உள்ள காசி விசுவநாதர் சன்னிதி உள்ளது. இராவணவதம் முடிந்ததும் சீதையோடு வானர வீரர்கள் சூழ கந்தமாதன மலைக்கு (இன்றைய கந்தமாதன பர்வதம்) வந்த இராமரை அகத்தியர் முதலான ரிஷிகளும், தேவர்களும் சந்தித்து வணங்கி வழிபட்டதோடு பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட ஆலோசனை கூறினர். அவர்கள் கூறிய படி பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்றை கொண்டு வரச் சொல்லி தன் பரம பக்தனான, போர்க்களத்தில் புகுந்து விளையாடிய அனுமனை இராமர் அனுப்பி வைத்தார்.
காலபைரவரோடு எற்பட்ட பஞ்சாயத்தால் அவர் வர தாமதமானது. பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் சீதை மணலை தன் கைகளால் குவித்து லிங்கம் போல் செய்து தர அதையே பிரதிஷ்டை செய்த இராமர் வழிபாட்டை ஆரம்பித்தார். தாமதமாக வந்த அனுமன் தான் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யச் சொன்னதோடு சீதை உருவாக்கிய லிங்கத்தை தன் வாலால் பிடுங்கி எறிய முயன்றார். தன் பலம் கொண்ட மட்டும் முயன்ற



