Friday, 6 April 2018

இராமர் வகுத்துக் கொடுத்த வழிபடு மரபு !

விபிஷணன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை அடுத்துகாசிவிசுவநாதர் லிங்கம்உள்ள காசி விசுவநாதர் சன்னிதி உள்ளது. இராவணவதம் முடிந்ததும் சீதையோடு வானர வீரர்கள் சூழ கந்தமாதன மலைக்கு (இன்றைய கந்தமாதன பர்வதம்) வந்த இராமரை அகத்தியர் முதலான ரிஷிகளும், தேவர்களும் சந்தித்து வணங்கி வழிபட்டதோடு பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட ஆலோசனை கூறினர். அவர்கள் கூறிய படி பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்றை கொண்டு வரச் சொல்லி தன் பரம பக்தனான, போர்க்களத்தில் புகுந்து விளையாடிய அனுமனை இராமர் அனுப்பி வைத்தார்

காலபைரவரோடு எற்பட்ட பஞ்சாயத்தால் அவர் வர தாமதமானது. பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் சீதை மணலை தன் கைகளால் குவித்து லிங்கம் போல் செய்து தர அதையே பிரதிஷ்டை செய்த இராமர் வழிபாட்டை ஆரம்பித்தார். தாமதமாக வந்த அனுமன் தான் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யச் சொன்னதோடு சீதை உருவாக்கிய லிங்கத்தை தன் வாலால் பிடுங்கி எறிய முயன்றார். தன் பலம் கொண்ட மட்டும் முயன்ற

Tuesday, 6 March 2018

பிள்ளைப்பேறு அருளும் பர்வதவர்த்தினி

மூன்றாம் திருச்சுற்றை முடித்து இரண்டாம் திருச்சுற்றுக்குள் வந்தால் பத்து கைகளும், துதிக்கையும் கொண்டு மேற்கு நோக்கிய நிலையில் அபூர்வ பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். இந்த பிள்ளையாருக்கு தெற்கே சக்கர தீர்த்தம் உள்ளது.

310 அடி நீளமும், 59.5 அடி அகலமும், 18.5 அடி உயரமும் கொண்டு விளங்கும் இரண்டாம் திருச்சுற்றின் வட கிழக்கில் சங்கு தீர்த்தம், பிரம்மஹத்தி தீர்த்தம், சூரிய புஷ்கரினி தீர்த்தன், சந்திர தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம் என எட்டு தீர்த்தக் கிணறுகள் உள்ளன. வடமேற்கில்கோடி தீர்த்தம்அமைந்துள்ளது. இராமர் வில் நுனியால் குத்தி ஊற்று உண்டாக்கி நீர் எடுத்து லிங்கத்திற்கு முழுக்கு செய்த இந்த கோடி தீர்த்தத்தோடு இரண்டாம் திருச்சுற்று முடிவடைகிறது.

Saturday, 3 March 2018

மாயவனைக் கட்டிப் போட்ட மன்னவன்!

பிரகாரங்களைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அனுப்பு மண்டபம் எனப்படும் முழுக்க கருங்கல்லினாலான சேதுபதி மண்டபம் வரவேற்கும். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தெற்கு முகமாக பெரிய அனுமன் தன் வலக்கையை உயர்த்தியபடி காட்சி தருகிறார். அனுமன் கோவிலுக்கு எதிரில் மகாலட்சுமி தீர்த்தம் உள்ளது. தீர்த்தத்தில் நீராடிய பின்பு தான் சன்னிதிக்குள் சென்று வழிபட வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடிய பின் அதே வழியாக மகாலட்சுமி சன்னிதிக்கு வரலாம்.

அனுமன் கோவிலுக்கு மேற்கு பக்கத்தில்சேதுபதீசம்” (சேதுபதி ஈஸ்வரம்) உள்ளது. சேதுபதி மன்னர்களில் ஒருவரான விஜயரகுநாத சேதுபதி நாள்தோறும் குதிரையில் வந்து இராமநாதரை வழிபட்ட பின்னரே இரவு உணவை உண்பது வழக்கம். ஒருமுறை அவர் வருவதற்குள் அர்த்தசாமபூஜை முடிந்து விட்டது. அதனால் இனியும் தரிசனம் தடைபடக்கூடாது என்பதற்காக இந்த சேதுபதீசத்தை உருவாக்கினார். இங்கு எழுந்தருளியிருக்கும் இராமநாதர், விசுவநாதர் இருவரும்சேதுபதியம்மன்என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் விஜயரகுநாத சேதுபதி குதிரை மீது சவாரி செய்யும் பாவணையில் அமைந்த உலோகச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சேதுபதீசத்தின் தெற்கே உள்ள சிறிய நடைமண்டபம் வழியாகவும் மகாலட்சுமி தீர்த்தத்தையும், மகாலட்சுமி சன்னிதியையும் அடையலாம்.

Wednesday, 28 February 2018

மன அழுக்குகளை நீக்கும் தீர்த்த நீராடல்!

ஆலய வாயில் கடந்ததும் கருவறைக்குச் செல்வதற்கு முன் ஆலயங்களுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். எல்லா தண்ணீரையும்தீர்த்தம்என்று சொல்வதில்லை. கோவிலின் கருவறையில் உள்ள இறைவனுக்கு படைத்து பூஜிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமேதீர்த்தம்என்போம். அத்தகைய போற்றுதலுக்குரிய தீர்த்தங்கள் இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய இருந்திருக்கிறது. இருக்கிறது. அதனாலயே சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது இத்தலத்தின் சிறப்பாக போற்றப்படுகிறது.

பூர்வ, புண்னிய பாவங்களை போக்கிக் கொள்ளவும், இறந்தவர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்யவும் மட்டும் இந்த தீர்த்தங்களுக்கு வந்து மக்கள் நீராடுவதில்லை. மக்கட்பேறு கிடைக்க வேண்டியும் இங்கு வந்து தீர்த்தமாடுகின்றனர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமலிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர் வங்கத்தில் இருந்து நடந்து வந்து இங்கு தீர்த்தமாடிய பின்பு தான் குழந்தை பிறந்ததாம்! இன்றும் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடினால் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.