Tuesday 27 January 2015

செல்லக்கிளியின் தம்பி

நந்தன் ஸ்ரீதரனின் தாழி என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைசெல்லக்கிளியின் தம்பி”. எதிர்வினையாற்றாமல் ஏவல் வேலை செய்யும் சென்றாயன்மெண்டல்” (பைத்தியம்) என்ற பெயருக்குரியவனாய் மாறிப்போன வலியைச் சொல்லும் கதை

அந்த ஊர் நாட்டாமையின் ஒரே மகள் செல்லக்கிளி. திடீரென நாட்டாமை இறந்து போக அவரின் உடன் பிறந்தவர்களால் செல்லக்கிளியும், அவளுடைய அம்மாவும் ஒதுக்கப்படுகிறார்கள். சுய சிந்தனையின்றி செயல்படும் செல்லக்கிளியை திருமணமான மூவரோடு ஓய்வு பெறும் வயதுடைய ஒருவரும் சுவைத்து எறிய அவள் கருவுறுகிறாள். குடும்ப மானத்தைக் காக்க அவளை ஆற்று நீரில் மூழ்கடித்து கெளரவக் கொலை செய்ய முடிவு செய்து அவள் கண்முன்னாலயே உறவினர்கள் அதற்கான திட்டத்தையும் போடுகின்றனர்.

Monday 26 January 2015

ஓலைக்கிளி

நகரத்தில் வசிக்கும் மருத்துவரை சவட்டி என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படும் பரமன் பலவருடம் கழித்து வயது வந்த பெண்ணோடு சந்திக்க வருகிறான். தன் மகள் என அறிமுகப்படுத்தும் அவளைப் படிக்க வைப்பதற்காக பண உதவி கேட்டு இரண்டாயிரம் ரூபாய் வாங்கிச் செல்கிறான். அவரிடம் வாங்கியதைப் போலவே தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆளுக்கு இரண்டாயிரம் என வசூலிக்கும் சவட்டி அந்தப் பணத்தின் மூலம் ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிக்கிறான். எளிதில் நம்மால் யூகிக்க முடியாத அதை சவட்டியின் குணங்களோடும், வாழ்வியல் முறைகளோடும் சொல்கிறதுஓலைக்கிளிகதை. இக்கதை எஸ்.ராமகிருஷ்ணனின்மழைமான்தொகுப்பில் உள்ளது.

எம்மான் என் பேரை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க. அந்தப்பேரு எனக்கே மறந்து போச்சுஎன்ற வரியின் வழி இட்டபெயர்களை பட்டப்பெயர்கள் மறக்கடித்து விடும் அவலத்தோடு மருத்துவரும், சவட்டியும் சந்திக்கும் கால இடைவெளியையும் -

ரசிக்க – சிந்திக்க -1

\

இக்கால தெருவிளக்கின் தந்தை, மின்னலுக்கும், மின்சாரத்திற்கும் ஒரே தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தவர், மூக்குக் கண்ணாடியின் தந்தை, சூட்டடுப்பை கண்டுபிடித்தவர், அசைந்தாடும் நாற்காலியை கண்டுபிடித்தவர் இப்படி பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்கிளின் ஓர் இலக்கியக் கூட்டத்திற்காக பாரீஸ் நகருக்கு சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தொடக்க உரையைக் கேட்டு மக்கள் அவ்வப்போது கைதட்டிய வண்ணமிருந்தனர். பிராங்கிளினுக்கு பிரெஞ்சு மொழி தெரியாததால் எந்த இடத்தில் கை தட்ட வேண்டும் என புரியவில்லை. அதேநேரம் எல்லோரும் கை தட்டும் போது தான் மட்டும் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கவும் அவருக்கு விருப்பமில்லை. எனவே அவருக்குத் தெரிந்த பெளலர் என்கிற அம்மையாரைப் பார்த்து அவர் கைதட்டும் பொழுதெல்லாம் தானும் கைதட்டினார்.

Thursday 22 January 2015

கடவுளின் நிலைக்கு உயர முடியுமா?

தன் அண்ணன் வாலியிடமிருந்து அமைச்சர்கள் சகிதம் தப்பிய சுக்ரீவன் எங்கு சென்று பதுங்கினாலும் தன்னை வாலி துப்புறுத்தாமல் விடமாட்டான் எனக் கவலைப்பட்டான். அதனால் அவனிடமிருந்து தப்ப தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் அவசியம் என்பதை உணர்ந்தவன் வாலி நுழைவதற்கு 144 தடையுத்தரவு நடப்பில் இருந்த ரிஷ்யமுக பர்வத மலைக்கு வந்து சேர்ந்தான். ஒருநாள் மலையின் உச்சிக்கு வந்த சுக்ரீவன் அங்கிருந்த பம்பா நதிக்கரையில் ஆயுதங்களுடன் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் பதறிப் போய் விட்டான். அவர்கள் யாரெனத் தெரியாத போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு திருப்தி வரவில்லை. மரவுரி ஆடைகள் தரித்திருந்த அவர்களின் தோற்றமும், உடற்கட்டும் சுக்ரீவனை சந்தேகப்பார்வை கொள்ள வைத்தது. அண்ணன் வாலியின் உளவாளிகளாய் இருப்பார்களோ? என யோசித்தவன் தன்னிடம் அமைச்சராக இருக்கும் அனுமனை அழைத்து உடனடியாக மாறு வேடமிட்டுச் சென்று வந்திருப்பவர்கள் யார்? என அறிந்து வா என உத்தரவிட்டான்.