Tuesday 19 February 2019

ஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.

இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறதுஎன்று மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டவர் .வே.சா. உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்த .வே.சா அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடராமன். ஆனால் அப்பெயரை அவரின் பெற்றோர்களே பயன்படுத்தவில்லை. சாமிநாதன் என்று பெயரிட்டு அழைத்தனர். நண்பர்களோசாமாஎன்றழைத்தனர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணிய சாமிநாதன் என்ற அவருடைய முழுப்பெயர் பின்னர் .வே.சா. என்றானது.

தன் வாழ்நாள் முழுக்க ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து அதைப் பதிப்பிக்க .வே.சா. ஒரு போதும் வருந்தியதில்லை. அதைத் தன் வாழ்நாள் பணியாகவே செய்தார். அவருடைய அந்திமகாலத்திற்குச் சில மாதங்களுக்கு முன், ”உங்களுக்கு மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள்?” என ஒரு பத்திரிக்கை துணையாசிரியர் கேட்டார்.

Monday 18 February 2019

பொய்த்துப் போகும் அனுமானங்கள்!

நேற்று சகோதரனின் வீடு குடியேறும் நிகழ்வு இருந்தது. நிகழ்வில் உறவினர்கள் வருகை இருக்கும் என்பதால் மற்ற குழந்தைகளோடு அவனும் இருக்கட்டும் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள்

சில தினங்களுக்கு முன் கடும் வயிற்றுப் பிரச்சனைக்காக மருத்துவக் கண்காணிப்பில் இருந்திருந்தான்

இதனால் நேற்று (17.02.2019) தினமணி நாளிதழோடு இணைந்து பரமக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே டோர்னமென்டிற்கு மகனை அனுப்ப வேண்டாம் என நினைத்திருந்தேன். என் அபிப்ராயத்தை அவனிடம் சொ்ன்னேன்.

"அதுலாம் பிரச்சனை இல்லை டாடி. கலந்துக்கலாம். அப்புறம் உங்க இஷ்டம்" எனச் சொல்லி விட்டு பள்ளிக்கூடம் போய் விட்டான்

Monday 11 February 2019

சித்திரமும், வாழ்த்தும்!

 
என் பதிப்பாளரும், கற்பகம் புத்தகாலயத்தின் நிறுவனருமான நல்லதம்பி அவர்கள் தன் மகனின் திருமண நிகழ்விற்கான அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அலைபேசி வழி அழைத்தும் சொன்னார். இன்றைய தேதியில் உள்ளூரில் வேறு ஒரு நிகழ்வு இருந்ததால் செல்ல முடியாத சூழலாகிப் போனது

கடந்த வருடம் அவரைச் சந்தித்த போது அவரது மகனை - இன்று மணநாள் காணும் மணமகனை - அறிமுகம் செய்து வைத்தார். கணினித் துறையில் இருந்தவரை பதிப்புத் துறைக்குக் கொண்டு வந்திருப்பதாய் சொன்னார். கேட்டவுடன் அவரின் துணிவு ஆச்சர்யமாக இருந்தது. அதேநேரம் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது.

வாழ்த்தை வார்த்தையில் தருவதற்கு பதில் வரைந்து தந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. உடனே நண்பரும், ஓவியருமான ஓவியர் ஆனந்தன் அவர்களின் நினைவு வந்தது. அவரிடம் ஆலோசனை கேட்டேன். செய்திடுவோம் என்றார். நான் நினைத்ததை விடவும் சிறப்பாய் மணமக்களின் சித்திரத்தைத் தீட்டிக் கொடுத்தார்.



Friday 8 February 2019

“பொதுப்புத்தி”யைத் தகர்த்த உரையாடல்!

அலுவலகத்தில் வந்து அமர்ந்ததும் மெயில், ப்ளாக், முகநூல், கூகுள் ப்ளஸ் என  வலம் வந்த பின்பே அன்றைய வேலைகளைத் தொடங்குவது வழக்கம். அப்படி வலம் வந்த ஒரு தினத்தில் “Your Google+ account is going away on April 2, 2019”என்று கூகுள் ப்ளசில் ஒரு அறிவிப்பு இருந்தது. முகநூலில் அது பற்றிய தகவல் பகிர்வும், கூடவே அதற்கான வழிமுறைகளும் பரவத் தொடங்கியிருந்தது. நானோ அந்த அளவுக்குக் கணினித் தொழில் நுட்பம் தெரிந்தவன் இல்லை. எனக்கான ப்ளாக்கை உருவாக்க நான் மெனக்கெட்டதை விடவும் அதற்காக நண்பர்களை படுத்தி வைத்தது அதிகம். சில நேரங்களில் அவர்கள் பொறுமையிழந்து என் லாக் இன் ஐடி வாங்கி அவர்களே ப்ளாக்கில் நான் கேட்டதைச் செய்து தந்து விடுவார்கள். அப்படியான ஒரு சூழல் மீண்டும் வந்து விட்டதோ? எனத் தோன்றியது.