Wednesday 30 August 2017

வார்த்தைகளும், வடுக்களும்...

பணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா? குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்க வேண்டுமானால் உங்களிடம் எப்பொழுதும் வார்த்தைச் சிக்கனம் என்ற வயாகரா இருந்து கொண்டேயிருக்க வேண்டும்

எந்த மனைவியாது, “தொண, தொணன்னு பேசி நச்சரிக்காதீங்க”, “பேசிப் பேசியே கழுத்தை அறுக்காதீங்கஎன கணவனைச் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல வீடுகளில் மனைவி கணவனின் காதோடு காது வைத்துகல்லுளிமங்கா”, “வாழைப்பழ சோம்பேறி”, “அழுத்தக்காரா”, “ஊமைக்கொட்டான்எனச் செல்லமாக உசுப்பேற்றி, உசுப்பேற்றியே பேச வைக்கின்றனர். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. கணவனுக்கும், மனைவிக்கும் சேர்த்து பேச வேண்டும் எனச் சொன்னால் கூட அசராமல் பேசுவார்கள். ஒரு ஜோக். ஒரு பையன், “என்ன தலைப்பு கொடுத்தாலும் அதைப்பற்றி ஒரு மணிநேரம் எங்க அம்மாவால் பேச முடியும் என்றான் பெருமையாக. உடனே அவனின் நண்பன், “இது என்ன பிரமாதம். எந்த தலைப்பும் இல்லாமலே ஒருநாள் முழுக்க கூட என் அம்மாவால் பேசமுடியும். உனக்கு சந்தேகம்னா எங்க அப்பாவைக் கேட்டுப் பாரேன்என்றான். பேசுவதற்காகவே பிறந்தவர்கள் பெண்கள். அது அவர்களின் குணம்