சென்ற முறை
தேர்வெழுத சென்றபோது
மெயின் ஹாலில்
என்னுடைய நம்பர்
இருந்தது. அந்த
அறை எல்லா
பாடங்களில் தேர்வு எழுதுபவர்களால்
சூழப்பட்டதைப் போல
எல்லா வயதிலும்
உள்ளவர்களாலும் பால்
பாகுபாடின்றி சூழப்பட்டிருந்தது.
கண்காணிப்பாளர்கள் என ஆணும், பெண்ணுமாய் பத்துப்
பேர் வரை இருந்தார்கள்.
போதாக்குறைக்கு அவ்வப்போது
சிலர் வந்து
போனார்கள். அத்தனை
கண்காணிப்பிலும் ஒரு
தேர்வர் தன்
செல் போனில்
பிட்டை பதிவு
செய்து கொண்டு
வந்து எழுதிக்
கொண்டிருந்தார். அதைக்
கண்டுபிடித்து செல்லை
பறிமுதல் செய்த
பெண் கண்காணிப்பாளர்
என் அருகில்
வந்ததும் மணி
பார்ப்பதற்காக டேபிளின்
மேல் நான்
எடுத்து வைத்திருந்த
என் செல்
போனை பார்த்து
விட்டு அதையும்
எடுத்துக் கொண்டார்.
ஏன் எடுக்குறீங்க?
மணி பார்ப்பதற்காக
தான் மேலே
எடுத்து வைத்திருக்கிறேன்.
வேண்டுமானால் உள்ளே
வைத்துக் கொள்கிறேன்
என்று சொன்னேன்.
அவர் தர மறுத்து விட்டார்.
அது கூட
பரவாயில்லை. அதற்கு
பிறகு தான்
பிரச்சனை ஆரம்பமானது.
அந்த கண்காணிப்பாளர்
தன் சக கண்காணிப்பாளரிடம் ரொம்ப
புத்திசாலின்னு நினைப்பு
போல.....செல்லுல
மணி பார்க்குறதுக்காக
மேலே வச்சிருந்தாராம்.
பறித்து வந்து
விட்டேன் என்று
சொன்னது என்
காதில் விழுந்தது.