மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது?
எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன
பதில் “புத்தகம்”. அதை
புத்தகக் கண்காட்சிகளிலும், பத்து
சதவிகிதக் கழிவில் கிடைக்கிறது என்றும் கை
நிறைய வாங்கி வந்து
அலமாரிகளை நிரப்பி வைக்கிறோம். எங்கள்
வீட்டிலும் ”புத்தக அலமாரி”
இருக்கிறது எனச் சொல்லிக் கொள்வதில் ஒரு
வித பெருமை கொள்கின்றோம். அழகுப்
பொருட்களை வாங்கி அடுக்கி வைத்திருப்பதைப் போல
புத்தகங்களை வாங்கி அலமாரிகளில் வைப்பதில் ஒரு
பயனுமில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவதற்காகவே நீண்ட
பட்டியலில் புத்தகங்களை வாங்குபவர்கள் அவைகளை
புரட்டிக் கூட பார்ப்பதில்லை என்பதே
எதார்த்தம். ”புத்தக வாசிப்பு” என்பது
மறைந்து போய் ”புத்தக
சேமிப்பு” என்பது இன்று
பேஷனாகி விட்டது. பயன்படுத்தாத புத்தகங்கள் கூர்
இல்லாத வாளுக்குச் சமம்.
அறிவை விசாலப்படுத்தச் செய்யும் புத்தகங்களை வெறும்
பொருளாக பார்க்கும் மனநிலை
மாற வேண்டும். அதற்கு
புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கு நாம்
ஒவ்வொருவரும் பழக வேண்டும்.
