Showing posts with label கடலெனும் வசீகர மீன்தொட்டி. Show all posts
Showing posts with label கடலெனும் வசீகர மீன்தொட்டி. Show all posts

Wednesday, 29 April 2020

கடலெனும் வசீகர மீன்தொட்டி

யாவரும் பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்திருக்கும்கடலெனும் வசீகர மீன் தொட்டிசுபா செந்தில்குமாரின் முதல் கவிதைத் தொகுப்பு. முற்றிலும் மாறுபட்ட பார்வையை நமக்குள் விரித்து விரவும் இத்தொகுப்பின் அநேகக் கவிதைகள் காதல், காமம், தனித்திருத்தல், எதார்த்தம் என நான்கு அடுக்குகளில் துளிர்த்தும்,  தனித்த அவலத்தின் சாயல் தரித்தும் நிற்கின்றன.

வாசிப்பவனின் தடம் பற்றி நிமிரும் கவிதைகள் அவனைத் தன் நிழலில் நிறுத்தும் போது அந்தக் கவிதைக்குள் தழும்பி நிற்கும் துயரம், சந்தோசம், தனிமை, கோபம், எள்ளல், காதல், காமக், கழிவிரக்கம் என எதுவொன்றையும் தனக்கானதாய் மாற்றிக் கொண்டு அடிக்கும், நுனிக்குமாய் ஊடு பாய்கின்றான். அதன் குளிர்ச்சியில் எப்பொழுதும் தன்னைப் பதப்படுத்திக் கொள்கின்றான். இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையானகடலெனும் வசீகர மீன்தொட்டிஅப்படியான ஊடுபாய்தலையும், தன் பதப்படுத்தலையும் தந்தபடியே இருக்கிறது. மீனின் வழியே பிரிந்திருப்பவனின் மீந்து வழியும் காமத்தை நமக்குள் கொண்டு செலுத்த கவிஞர் சுபா கட்டமைத்திருக்கும் / பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில் / ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை / ரகசியமாய் உதடுகள் குவித்து நீந்துகின்றன / ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள் / வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது / பகிர்ந்து கொள்ளப்படாத காமம் / இப்படியான ஒற்றை வரிகள் அந்தத் துயரின் அளவிடமுடியாத அடர்த்தியை உணரச் செய்து விடுகிறது.

Thursday, 27 February 2020

இரட்டைத் தலைகளுடன் வாழ விதிக்கப்பட்டவன்!

சுபா செந்தில்குமாரின்கடலெனும் வசீகர மீன்தொட்டிசமீபத்தில் வாங்கிய, வாசித்துக் கொண்டிருக்கின்ற கவிதை நூல்களில் ஒன்று. தலைப்பு மட்டுமல்ல இதில் இருக்கும் கவிதைகளும் வசீகரமானவை. வாழ்வியலின் கூறுகளை அதன் அகத்திலும், புறத்திலுமாய் நின்று நம்மோடு கலந்துரையாடுபவைகள். அச்சு, இணைய இதழ்களிலும், முகநூல் பக்கத்திலும் இவரின் கவிதைகளை அவ்வப்போது வாசித்திருந்த போதும் தொகுப்பில் வாசிக்கும் போது அது வாழ்வின் அத்தனை இழைகளிலும் பின்னலிட்டு செல்லும் உணர்வைத் தருகின்றன.

அனுபவித்த / கேள்விபட்ட / கண்டுனர்ந்த நிகழ்வை தனக்கான மொழி நடையில் முழு சித்திரமாக்கித் தரும் சுபாவின் கவிதைகள் நமக்கான அருகாமையை இன்னும் சுருங்க வைக்கின்றன. தொகுப்பில் இருக்கும் அப்படியான பல கவிதைகளுள் ஒன்றுபொருள்வயிற் பிரிதல்எனும் கவிதை.