Showing posts with label காம்கேர். Show all posts
Showing posts with label காம்கேர். Show all posts

Monday, 22 November 2021

ஒரு கேள்வியும் - பதிலும்

எதையும் திட்டமிடவில்லை. என் பணியை எனக்கு விருப்பமானதை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். என் 10 வயதில் இருந்து தினந்தோறும் எழுதி வருகிறேன். இப்போது சமூக வலைதளங்கள் இருப்பதால் அவை உங்கள் அனைவருக்கும் தெரிகிறது அவ்வளவுதான்.

எந்த ஒரு சிறு வேலையை சிறப்பாக செய்தாலும் அது கொடுக்கும் மனநிறைவை மனதுக்குள் கொண்டாடுவேன். அதுவே என் வெற்றியாக கருதுகிறேன். அதுபோலவே 1000-வது பதிவிலும். அவ்வளவுதான்

 

 நன்றி - காம்கேர். புவனேஸ்வரி

Sunday, 29 August 2021

காம்கேரின் “வாசக கெளரவம்”!

காம்கேர் நிறுவனர் காம்கேர்.புவனேஸ்வரி அவர்கள் முகநூலில் எழுதி வரும் பதிவுஜம்முனு வாழ காம்கேரின் OTP". நம் அன்றாட செயல்பாடுகள், நம்மைச் சுற்றி, நம் வீட்டில் நிகழும் நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும், கண்டுணரவும் இல்லாது கடந்து விட்ட, கவனிக்கத் தவறிய விசயங்களை சுட்டியும், குட்டியும் அவர் எழுதும் பதிவுகளை அன்றாடம் வாசிக்க இயலாத போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து விடுவேன்.

பிள்ளைகளோடு செலவிடும் நேரங்களில் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். ”பாடம்”, ”படிப்பினை”, ”அறிவுரைஎன எல்லா தளங்களிலும் அந்த பதிவுகள் விசயதானங்களை வழங்கி இருக்கின்றன.
 
எனக்கு மட்டுமல்ல, அவருடைய பதிவுகளை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவ்வாறே  கிடைத்திருக்கின்றன என்பதற்கு அவரின் ”காம்கேரின்OTP” பதிவுகளுக்கு  வாசகர்களால் எழுதப்படும் பின்னூட்டங்களே சாட்சி!

Thursday, 22 April 2021

காம்கேர் C.E.O. உடன் ஒரு நேர்காணல்

COMPCARE SOFTWARE நிறுவனத்தின் C.E.O. உயர்திரு. காம்கேர். புவனேஸ்வரி அவர்கள் I.T. துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். தன் தொழில்நுட்பத் துறை சார்ந்த நூல்கள் உள்பட பலதரப்பட்ட துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக உள்ளன. 

தன் கிரியா ஊக்கிகளை நம்மைப் போன்றவர்களும் இயங்குவதற்காக தன்னுடைய எழுத்து, பேச்சுகளின் வழியாக தரக்கூடியவர். நாள் தவறாது, நேரம் தவறாது 2019 ம் ஆண்டிலிருந்து இரண்டாண்டிற்கும் மேலாக தன் முகநூல் பக்கத்தில் அவர் எழுதி வரும் பத்திகளை வாசிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும். அவைகளைத் தொகுத்து அவருக்கு அனுப்பி இருந்தேன். சில சமயங்களில் கேள்வியை விட அதற்காகச் சொல்லப்படும் பதிலால் அந்தக் கேள்வி அர்த்தமுள்ளதாகவும், அடர்த்தியானதாகவும் மாறிவிடும். அப்படி தனது பதில்களால் என் கேள்விகளை தனித்துக் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். 

என் கேள்விகளை அவர் நேர்காணல் போலக் கருதி மிக அழகாக தொகுத்து பதில் கொடுத்திருந்தார். தனக்குக் கிடைத்த அனுபவங்கள், தான் எதிர்கொண்ட, பார்த்த நிகழ்வுகளின் வழியாகவே அமையும் அவரின் பதில்களிலிருந்து நம் அன்றாட தேவைக்கான ஆக்சிஜனைப் பெற முடியும். நான் பெற்றிருக்கிறேன். அவரிடம் நான் கேட்டிருந்த கேள்விகள் - 

Wednesday, 22 April 2020

நான்கு இலக்கம் நோக்கிய நம்பிக்கை!

முகநூலில் என் நண்பர்கள் சிக்சர்களாக விளாசிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அது எனக்கு அறிமுகம். நண்பர் பிரகாஷ் முகநூல் கணக்கைத் தொடங்கி அதில் எப்படி பதிவுகள் செய்ய வேண்டும் என்று பாடம் நடத்தி கட்டாயப்படுத்திய பின்பே முகநூலுக்குள் வந்தேன். அதில் பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருந்த நேரத்தில் சிலர் தங்களது பக்கங்களில் பகிர்ந்திருந்த அவர்களுடைய வலைப்பக்க லிங்க் வழியாக நுழைந்து திரிந்ததில் வலைப் பக்கம் பற்றிய அறிமுகம் கிடைத்ததுஅதன் வடிவமைப்பு தந்த கவர்ச்சியால் பல பேரின் வலைப்பக்கங்களுக்குச் சென்று பார்த்த பின் ஒரு ஆர்வத்தில் நண்பர்களிடம் வலைப்பக்கம் குறித்து விசாரித்தேன்.

வலைப்பக்கத்திற்கு காசெல்லாம் கட்டத் தேவையில்லை. எல்லாம் இனாம் தான். உன்னைப் போல எழுதத் தெரிந்த (!) நபர்களுக்கு வலைப்பக்கம் ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி. உன்னைப் பற்றிய விளக்கமெல்லாம் யாருக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உன் வலைப்பக்க முகவரி கொடுத்தால் அதைப் பார்த்து அவர்களே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள் என அவர்கள் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்து விட மனம் இன்னும் கொஞ்சம் ஆசை கொள்ள ஆரம்பித்தது.

ஆசை தானே துன்பங்களுக்கு காரணம். இந்த விசயத்தைப் பொருத்தவரை என் ஆசை என் நண்பர்களுக்குத் துன்பமாகி விட்டது! வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற என் நமுப்பு தாங்காமல் அவர்கள் சில லிங்க் அனுப்பி இதைப் படித்து நீயே வலைப்பக்கத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். முயற்சி செய்ஏதாவது சிக்கல் என்றால் நாங்கள் சரி செய்து தருகிறோம் என்றார்கள்வேலையைவும், நேரத்தையும் விரட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் துறையில் இருக்கும் அவர்களால் அதை மட்டும் தான் எனக்குச் செய்ய முடிந்தது.