Showing posts with label கவிஞன் சிற்றிதழ். Show all posts
Showing posts with label கவிஞன் சிற்றிதழ். Show all posts

Wednesday, 10 July 2013

சமாதான சுவாசம்


ஆயுதங்களால் ஆட்குறைப்பு
செய்து கொண்டவர்கள்
ஆயுதங்களின் சந்தைகளில்
மந்தைகளாகிப் போனவர்கள்
சமாதானத்தின் சன்னல்கள் மீது
கல்லெறிந்தவர்கள்
அமைதியின் குரல்வளையை
தன்னாளுமையால் நசுக்கி எறிந்தவர்கள்
தன் நாட்டு வலிமையை
எதிரி நாட்டு விதவைகளில் கணக்கிட்டவர்கள்
ஆண்மையற்ற இவர்களிடம்
கையேந்தி காத்துக்கிடக்கிறது
உலக சமாதானத்தின்
வாசமும்....சுவாசமும்!

நன்றி : கவிஞன்