தன்னம்பிக்கை நூல்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, ஜெயித்தவர்களின் வரலாறுகளைத் தொகுத்து நம்பிக்கை தரும் நூல்கள். மற்றொரு வகை, ஜெயித்தவர்கள் நேரடியாகத் தாங்கள் சாதித்த விதத்தை அனுபவங்களோடு பகிர்ந்து அதன் மூலம் நம்பிக்கை அளிக்கும் நூல்கள். இதில் இந்நூல் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால் நிறுவனங்களின் அதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன்.
வியாபாரத்தில் ஜெயிப்பதற்கான தனிப்பட்ட குணாதிசயங்களை நிறைய கதைகள், வெற்றியாளர்களின் வாழ்வியல், தன் தொழில் முறை அனுபவங்களோடு கலந்து கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வியாபாரம் தொடங்குபவர்களுக்கும், அதில் இருப்பவர்களுக்கும் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வியலுக்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது.




