Showing posts with label வாங்க ஜெயிக்கலாம். Show all posts
Showing posts with label வாங்க ஜெயிக்கலாம். Show all posts

Friday, 28 July 2017

மாற்றம் – முன்னேற்றம் - வெற்றி

பிரபஞ்சத்தின் கோடான கோடி உயிர்களில் நீங்களும் ஒருவர்நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்ய முடியும். மற்றவர்கள் வேண்டுமானால் வழிகாட்டலாம். ஆலோசனை தரலாம். ஆனால் மாற்றிக் கொள்வதும், மாறுவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அரசியல் முழக்கம் போலமாற்றம்முன்னேற்றம்வெற்றிஎன்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மட்டுமல்ல உங்களின் இலக்கினை நோக்கியும் முன்னேற வைக்கும்.

Monday, 24 July 2017

முடியும் என்ற நம்பிக்கை

கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கஷ்டம் என்பதைப் போலமுடியும்என்பதை விடமுடியாதுஎன்று சொல்வது இன்று ஈசியான செயலாகி விட்டது. எல்லோருக்குமானதைத் தனக்கானதாக ஏற்றுக் கொள்ளாதவர்களே வெற்றியாள்ர்களாக மிளிர்கின்றனர் என்ற விதி இங்கும் பொருந்திப் போகிறது. என்னால் முடியாதுஇயலாதுசாத்தியமில்லைவாய்பே இல்லை என்பதை எந்த நிலையிலும் வெற்றியாளர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை. மாறாக தாங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் முடியும்இயலும்சாத்தியம்வாய்ப்புண்டு என்று மாற்றி அமைக்கின்றனர்.

எந்த ஒன்றை ஆரம்பிக்கும் போதும் அதை முடியும் என்று சொல்பவர்களை விட முடியாது என்று சொல்லி எதிர்மறை எண்ணங்களை நமக்குள் கடத்த நினைப்பவர்களுக்கு பஞ்சவே இருப்பதில்லை. அதற்காக அவர்கள் உங்கள் முன் வைக்கும் காரணம் மிகச் சரியாகப் பொருந்துவதாய் தெரியும். விட்டு விடலாம் என்ற மனநிலையை உருவாக்கும். அதில் சிக்காமல் தப்புகிறவர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கின்றனர். மாறாக, அதற்குள் அகப்பட்டுக் கொள்பவர்கள் தங்களின் இலக்கில் இருந்து பின் வாங்கி விடுகின்றனர். இது போதும் என நிறைவு கொள்கின்றனர். வெற்றியாளர்களாக மாற நினைப்பவர்கள் அப்படி நின்று விடுவதில்லை. அவர்கள் மற்றவர்களை விடத் தன்னை மட்டுமே முழுமையாக நம்புகிறார்கள். அதனால் ஒருவேளை தோல்வி ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். காரணம் சொல்பவர்கள் காரியங்களைச் செய்வதில்லை. காரியம் செய்ய முனைந்தவர்கள் காரணங்களுக்காகப் பின் வாங்குவதில்லை. அதற்காக தங்களின் நேரம் முழுமையையும் கொடுத்துப் பாடுபடுகின்றனர்.

Saturday, 15 July 2017

நகர்ந்து கொண்டே இருங்கள்

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும் என்பது சினிமாவில் எழுதப்பட்ட வாழ்வியலைச் சொல்லும் பாடலின் வரி. வாழ்வின் ருசி மட்டுமல்ல வாழ்வும் கூட தேடல்களால் தான் சுவராசியமடைகிறது. தேடல்களோடு இருப்பவர்கள், ”இது என்ன வாழ்க்கை? செக்குமாட்டுத்தனமாய் இருக்கிறதுஎன்றெல்லாம் புலம்புவதில்லை. மாறாக, தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையைத் தேடலின் வழியாக சுவராசியப்படுத்திக் கொள்கிறார்கள். எப்பொழுது தேடலை நிறுத்துகிறீர்களோ அப்பொழுது உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறி போய் விடுகிறது.

Tuesday, 11 July 2017

கனவை நனவாக்குங்கள்

கனவு காணாத மனிதர்களே இல்லை. கனவு என்பது நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த விசயமாகி விட்டது. அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கவே செய்கிறது. இலக்கின் இன்னொரு பெயர் தான்கனவு”. அதை அவரவர் மொழிக்கேற்ப ஆசை, விருப்பம், தேவை என அழைத்துக் கொள்கிறோம். அதன் காரணமாகவே மறைந்த அப்துல் கலாம் தன்னுடைய வாழ்நாள்; முழுக்கப் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி இளையோர்கள் வரைகனவு காணுங்கள்என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இலக்கை எட்டுவதை முன் கூட்டியே மனதிற்குள் காட்சிப் படுத்திப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதையே கனவு என்று மனவியலாளர்கள் வரையறுக்கின்றனர்