Showing posts with label அந்தமான் செல்லுலார் சிறை. Show all posts
Showing posts with label அந்தமான் செல்லுலார் சிறை. Show all posts

Sunday, 2 February 2020

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

தன் முகநூல் பக்கத்தில் என்அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறுநூல் குறித்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதியுள்ள அறிமுக உரை

சிறிய புத்தகம் என்றாலும் இதன் தகவல்கள் படுசுவாரசியமும், அதிர்ச்சியையும் தரக்கூடியது. ஒருமுறையாவது அந்தமான் சிறை சென்று பார்க்க வேண்டும் அங்கு காற்றோடு கலந்திருக்கும் புரட்சியாளர்களின் குமுறலைகளை கேட்க வேண்டும். அங்கு படிந்திருந்த போராளிகளின் ரத்த வாடைய முகர வேண்டும் என்று தோன்கிறது. டேவிட் பர்ரி என்கிற சர்வாதிகார 4 அடி கொடுங்கோலன் பற்றிய தரவுகள் வியக்க வைக்கிறது. அருமையான ஆய்வு நூல்!

Sunday, 22 December 2019

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

 "அந்தமான் - செல்லுலார் சிறை ஒரு வரலாறு" குறித்து தன் நேரடி பயண அனுபவத்துடன் எழுத்தாளரும், காம்கேர் நிறுவனத்தின்  நிறுவனருமான உயர்திரு.  புவனேஸ்வரி  அவர்கள் முகநூலில் எழுதிய அறிமுகம்.

சென்ற வருடம் குடும்பத்துடன் அந்தமான் பயணம். அங்கு சுற்றுலா தளமாகியிருந்த அந்தமான் செல்லுலார் சிறையில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

அந்தமான் சிறையில் கொடுமைகளை அனுபவித்த நம் இந்திய வீரர்களின் தியாகத்தை உண்மை சம்பவம் போல நாடகமாக செய்து காண்பித்தார்கள்

நிகழ்ச்சி பொதுவாக மாலை நேரங்களில் மட்டுமே. ஏனெனில் அப்போதுதான் சிறை அறைகளில் விளக்கு வெளிச்சத்தைக் கொடுத்து எந்த அறையில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதால் அந்த ஏற்பாடு.

சிறைச்சாலை அறைகளில் இருந்து சிறை அதிகாரிகளின் கொடூரமான பேச்சுகளும், அவர்களின் பூட்ஸ் காலடி சப்தங்களும், அவர்கள் செய்கின்ற கொடூரங்களும், கைதிகளின் கூக்குரல்களும் நிஜமாகவே நடப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி

Wednesday, 11 December 2019

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு” -  நூலுக்கு தினமலர் விமர்சனம்

நன்றி : தினமலர் நாளிதழ்