27-07-2015 ல் டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானதையொட்டி என் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவுகள்
---------------------------------------------------------------------------
28-07-2015
என் மண்ணின் அடையாளத்தை மாற்றியமைத்து தேசத்தின் அடையாளத்தை ”அக்னிச் சிறகு”களால் உலகிற்குப் பறைசாற்றிக் கடமை செய்யக் கற்றுத் தந்து விட்டு கண் உறங்கப் போய் விட்டீரோ?
கருணையற்ற காலனிடமிருந்து மீட்கத் தெரியாத துர்பாக்கியவானாய் உங்கள் காலடியில் எங்கள் கண்ணீரைச் சமர்பிக்கிறோம்.