Monday 28 July 2014

ஆம்பளை பிள்ளையை அடிச்சி வளர்க்கனும்!?

ஏழு மணிக்கு தான் எழுந்திருக்கிறான்.

ஹோம் ஒர்க் ஒழுங்கா பண்ணமாட்டேங்கிறான்.

ஸ்கூல் வேனில் சீட்ல உட்காரம அங்க, இங்கன்னு ஓடிகிட்டிருக்கான்.

பக்கத்துல போய் உட்கார்ந்து டி.வி. பார்க்கிறான்.

பெரியப்பா கடையில போய் காசு கொடுக்காமல் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றான்.

உன்னைய மாதிரி உன் தம்பி இல்லைன்னு மிஸ் சொல்ற படி நடந்துக்கிறான்.

யூனிஃபார்ம் தச்சு வந்துடுச்சு. ஆனாலும் அதை போடாம கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வர்றான்.

சாப்பாட்டுல கொழம்பு ஊத்தி சாப்பிடமாட்டேங்கிறான்.

Sunday 27 July 2014

தானே விழுந்த விதை

விருந்தாளியாக செல்லும் போதெல்லாம் பார்த்து போயிட்டு வான்னு சொல்வதோடு நிறுத்தாமல் ஏதாவது வாங்கிட்டு போ என சொல்வது என் தந்தையின் வழக்கம். வெறுங்கையோடு போவதும் அங்கே போயிட்டு எதுவும் வாங்கிட்டு வரலையேன்னு சொல்லிட்டு குழந்தைகள் கையில் காசு கொடுத்துட்டு வருவதும் அவருக்கு பிடிக்காத ஒரு விசயம். ஆனால் பல நேரங்களில் அவரின் அறிவுறுத்தலை நான் பின்பற்றியதில்லை. எதுக்கு இங்கே வாங்கி தூக்கிட்டு போகணும். அங்கேயே போய் ஏதாவது வாங்கிக்கலாம் என்ற நினைப்பு பல நேரங்களில் அதற்கு காரணமாகிவிடும்

இரு குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் இந்த பழக்கத்தை கையகப்படுத்த முடியாத நிலையில் ஒருநாள் குடும்பத்தோடு என் மனைவியின் தங்கை வீட்டில் இந்த வருட புது வரவாய், உறவாய் பிறந்திருந்த குட்டிச்செல்லங்களை பார்க்க கிளம்பினேன். அப்போது என் மகள், ”டாடி………தங்கச்சி பாப்பாவுக்கு நாங்க இன்னும் ஒன்னுமே வாங்கித் தரல. அதுனால ஒரு டிரஸ் வாங்கிட்டு போவோம்னுசொன்னாள். அதான் நானும், அம்மாவும் டிரஸ் வாங்கிட்டோமேனு நான் சொன்னேன். அதற்கு அவள்இது நீங்க வாங்கிக் கொடுக்குறது. நாங்க வாங்கி கொடுக்க வேணாமா? தங்கச்சி பாப்பாவை வெறும் கையோடு போயா பார்ப்பாங்க? என்று கேட்டாள்.

Saturday 26 July 2014

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

மகளிடமிருந்து வந்த அழைப்பை எடுத்ததும் இனிமே நான் உங்க கூட பேச மாட்டேன் டாடி என்றாள். சற்றே பதறிப்போய் ஏம்மா? என்று கேட்டேன். எனக்கு எக்ஸாம் நடந்துக்கிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியும். என்னைக்காவது எனக்கு ஒரு விஷ் (WISH) பண்ணீங்களா? என்று கேட்டாள்.

அதான் நீ உனக்கு எக்ஸாம்னு சொன்ன முதல் நாளே விஷ் சொன்னனே? என்றேன்.

அதற்கு அவள் அது அன்னைக்கு எழுதப் போன எக்ஸாமுக்கு மட்டும் தானேஒவ்வொரு நாளும் வேற, வேற எக்ஸாம் நடக்குது. அதுனால நீங்க தினமும் காலையில எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு விஷ் சொல்லி இருக்கனும்ல? என்று கேட்டாள்.

Monday 21 July 2014

இலக்கே வாழ்க்கையின் விளக்கு!

நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். வெற்றியாளராக வலம் வர ஆசைப்படுகிறோம். இவ்விரண்டுமோ அல்லது இவ்விரண்டில் ஒன்றோ நிகழ வேண்டுமானால் அதற்குஇலக்கு என்ற ஒன்று அவசியம் வேண்டும். அந்த ஒன்றை நோக்கி செயல்படுகின்ற போது தான் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறுகின்றது. “இலட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்கிறார் மாஜினி.

இலக்கு குறித்து நம்மில் பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. அது ஏதோ தனிப்பட்டவர்களுக்கும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கும் உரியதாய் எண்ணிக் கொள்கின்றனர். விண்ணில் ஏவுகணை ஏவுவதும், புதிய கண்டுபிடிப்புகளை செய்வதும், தன் ஆற்றலுக்கும், திறமைக்கும் மீறிய விசயங்களைச் செய்து காட்டுவதும் மட்டுமே இலக்கு என வரையறையற்ற இலக்குகளை குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வைக்கப் பழகி விட்டதன் விளைவாக நாம் வாழும் வாழ்க்கையை மிகச் சாதாரணமானதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கிக் கொள்கின்றோம்.