Saturday 31 October 2015

வலைப்பதிவர் திருவிழாவும், வியாக்கானங்களும்!

 

மழை விட்டும் தூவானம் விடாத கதையாய் வலைப்பதிவர் திருவிழா முடிந்து இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அது சார்ந்த பதிவுகள் வலைப்பக்கங்களை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. இதுவே அந்நிகழ்வின் வெற்றியைச் சொல்வதற்கான சாட்சியாகிறது. இருந்த போதும் ஆதரவும், எதிர்ப்புமாய் எழுந்த குரல்கள் சில முன்னெடுப்புகளுக்கும், அடுத்த நிகழ்விற்கான தயாரிப்புகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த வழிமுறைகளை முன் நிறுத்தியவர்கள் அதை எவருக்கும் உறுத்தலின்றிச் செய்திருந்தால் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கும். ”வலைப்பதிவர்களும் குழு மனப்பான்மையோடு செயல்படுகின்றவர்கள்என்ற வாதத்தை வதங்கிப் போகச் செய்திருக்கும்.

Monday 26 October 2015

புகைப்படம் - 19

மணிமேகலைப் பிரசுரம் நடத்திய  புத்தகக் கண்காட்சியில்


Saturday 24 October 2015

வலைப்பதிவர் விழாவில்!

புதுக்கோட்டையில் நடந்த "வலைப்பதிவர் விழா 2015" ல் இடம் பெற்ற சுவரொட்டியில்


நன்றி : வலைப்பதிவர் விழாக் குழு & வளரும் கவிதை வலைப்பக்கம்


Thursday 22 October 2015

ஆய்வுக் கட்டுரையில்!

சிங்கப்பூர் பொன் விழாக் கருத்தரங்கிற்காகசிங்கப்பூர் புதுக்கவிதை -  நோக்கும், போக்கும்குறித்து முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள் ஆய்வு செய்த கட்டுரைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பல கவிதைகளில் ஒன்றாய் இடம் பெற்றிருக்கும் என் கவிதை

புராணத்தில்

பந்தயப் பொருளாய்

போர்க்களத்தில்

காரணப் பொருளாய்

அரசவையில்

அந்தப்புர மினுக்கியாய்

பத்திரிக்கையில்

கவர்ச்சிப் பதுமையாய்

Sunday 18 October 2015

தூண்டலைத் தரும் அகல் விளக்குகள்!

இரண்டு தினங்களுக்கு முன் பள்ளியிலிருந்து திரும்பிய மகன் இன்னும் இரண்டுவாரம் கழித்து வரும் பிரேயர் அசெம்பிளிக்கு (PRAYER ASSEMBLY) எங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அன்றைய ஆங்கிலச் செய்தித்தாள்களிலிருந்து முக்கியச் செய்திகளை வாசிப்பதற்கு என் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள் என்றான்.  

அடுத்த வாரம் அம்மா யுனிவர்சிட்டிக்குப் படிக்கப் போயிடுவா. உன்னால எப்படிப் பிரிப்பேர் பண்ண முடியும்? அதுனால மிஸ்கிட்ட முடியாதுன்னு சொல்லிடு என்றேன். அவனோ முழு பிரேயர் அசெம்பிளியும் நாங்க மட்டும் தான் டாடி செய்யப் போறோம். அதுனால நியூஸ் இல்லைன்னா வேற எதுக்காது பெயரை மாற்றிக் கொடுக்கலாம். மிஸ்கிட்ட நீங்க பேசுங்க. இல்லைன்னா இலக்கியா பிள்ளையப் பேசச் சொல்லுங்க என்றான்

அவனவன் பசிக்கு அவனவன் தான் சாப்பிடனும்உனக்கு மாற விருப்பம் இருந்தால் நீ தான் மிஸ் கிட்ட கேட்கனும் என அறிவாளித்தனமாய்(!) சொன்னேன். இரண்டொருமுறை தயங்கித் தயங்கிச் சொல்லிப் பார்த்தவன் இவன் கதைக்கு ஆகமாட்டான்னு நினைச்சானோ என்னவோ? சரி……பேசிப்பார்க்கிறேன் எனச் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்து விட்டான். ஆனால், அன்றிரவே தன் அம்மாவிடம் சொல்லி மிஸ்ஸிடம் பேசி தொகுப்பாளராகச் (COMPERE) செயல்பட ஒப்புதல் பெற்றிருந்திருக்கிறான்