வால்மிகி எழுதிய இராமாயணம் போலவே தன்னைப் பற்றியும் ஒரு காவியம் எழுத வேண்டும் என தன் அவைப்புலவர்களை அழைத்து கூறினான் முகம்மது பின் துக்ளக்.
புலவர்களோ எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டனர்.
என்ன விழிக்கிறீர்கள்? இராமனை விட நான் எந்த விதத்தில் குறைந்தவன்? உங்களால் எழுத முடியுமா? முடியாதா? என்று தன் அவைப்புலவர்களிடம் கர்ஜித்தான் துக்ளக்.
ஏன் முடியாது? உங்களுக்கு என்ன குறை? ஆனால் ஒரு சந்தேகமிருக்கிறது. அதைத் தாங்கள் தீர்த்து கொடுத்தால் இன்றே அதற்கான வேலைகளை ஆரம்பித்து விடலாம் என்றார் ஒரு புலவர்.
என்ன சந்தேகம்? என்றான் துக்ளக்.