Monday 24 November 2014

வெற்றிக்கு ஐந்து காரணிகள்

கற்றுக்கொள்ளத் தயாராய் இருங்கள் :

எப்பவும், எதையும், எதிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கடந்து சாதிக்கவும், வாழ்வை தன் வசப்படுத்தவும் முடியும். இதற்கென நீங்கள் அதிகமாக மெனக்கெடவோ, உங்கள் மூளையை கசக்கிப் பிழியவோ வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியிருக்கக் கூடியவைகளை, நிகழ்பவைகளை உற்று நோக்கினாலே போதும். ”மாணவன் தயாராய் இருக்கும் போது குரு தானே தோன்றுவார்என்பது கற்றல் விசயத்தில் முற்றிலும் சரியல்ல. இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் வெவ்வேறு வடிவங்களில்., உருவங்களில், அஃறிணையாகவும், உயர்திணையாகவும் குருவானவர் உங்களைச் சுற்றிலும் இருந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார். மாணவனாக நீங்கள் மாறி கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி. குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

Sunday 23 November 2014

புகைப்படம் - 7

சிங்கப்பூரின் தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது


Wednesday 19 November 2014

”அவளு”க்கும் பெயர் இருக்கு!

நீண்ட நேரம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மகனிடம் அம்மா எங்க? என்றேன்.  

சமைக்க கறி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றவனிடம்அவள்ட்ட கொடு என்றேன்

அவள்னு ஏன் சொல்றீங்க. அம்மாவுக்கு பேர் இல்லையா? என்றான்.  

எதிர்பாராத இந்தக் கேள்வி சற்றே தடுமாற்றத்தைத் தர சுதாரித்துக் கொண்டு அப்படிச் சொன்னா தான் அவளுக்குப் பிடிக்கும் என்றேன்.  

அது எப்படி உங்களுக்குத் தெரியும்? என்றான்.  

அவ எனக்கு பிரண்ட்(FRIEND). அதுனால தெரியும் என்றேன்.  

பிரண்டுன்னா தெரியுமாக்கும். அவங்க சொன்னா தானே உங்களுக்குத் தெரியும். பிரண்டு கிட்ட கொடுன்னு சொல்லுங்க. ”அவகிட்டேன்னு சொல்லாதீங்க. இல்லைன்னா சங்கீதகலா (மனைவி பெயர்) கிட்ட கொடுன்னு சொல்லுங்க. சரியா? என்றான்.  

Tuesday 18 November 2014

உல்லாசக்கப்பல் பயணம்

சுற்றுலா செல்வதற்கு ஒரு காலத்தில் சாத்தியமானதாக இருந்த கப்பல் பயணம் பொருளாதாரபலம், நேர விரய தவிர்ப்பு ஆகியவைகளால் ஆகாயவிமானங்களுக்கு மாறின. விமான பயணங்களின் மூலம் பார்க்க வேண்டிய இடங்களின் தூரங்கள் குறைந்தது போலவே அந்தப் பயணம் சார்ந்த நினைவுகளின் வாழ்நாளும் குறைந்து போயின. இந்த நிஜத்தை உணர்ந்த கப்பல் நிறுவனங்கள் தங்களுடைய உல்லாசக் கப்பல்கள் மூலம்க்ரூஸ்எனப்படும் பயணங்களை அறிமுகம் செய்தன. இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக அது மாறிவிட்டது. விமான பயணச் சுற்றுலாக்கள் போல கப்பல் பயணச் சுற்றுலாக்கள் சட்டென அது சார்ந்த நினைவுகளை நீர்த்து போக வைப்பதில்லை. விரைவாக இன்னொரு மனநிலைக்கு நம்மை கடத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பசுமரத்தாணியாய் மனதில் உறைந்து அவ்வப்போது அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கும். கப்பலின் பிரமாண்டம் போலவே அதில் கிடைக்கும் பிரமாண்ட வசதிகள், பல நாட்டவரோடு குறிப்பிட்ட சில தினங்கள் கலந்து குழுவாக இன்னும் சொல்லப்போனால் நவநாகரீக வசதி கொண்ட கிராமத்தில் வாழ்தல் போன்ற உணர்வு (கப்பல் சிப்பந்திகள், கலைஞர்கள் தவிர இந்த பயணநாவல் பேசும் கப்பல் பயணத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த 3624 பிரயாணிகள் பயணம் செய்துள்ளனர்) ஆகியவைகள் அதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த காரணத்தை ஏற்க முகாந்திரம் கேட்பவர்களுக்கு அதற்கான எல்லா தரவுகளையும் தாராளமாய் அள்ளித் தருகிறது இந்த உல்லாசக் கப்பல் பயணம் நூல்.