”மெளன அழுகை” கவிதை தொகுப்பிற்கு கவிஞரும், விமர்சகருமான திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம்
மு.கோபி சரபோஜி அழகன்குளம்( இராமநாதபுரம் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தவர். கவிதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், தன்னம்பிக்கை என இதுவரை 21 நூல்கள் வந்துள்ளன. இது இவரது மூன்றாவது கவிதை தொகுப்பு.
இதில் 54 கவிதைகள் உள்ளன. எளிமை, தெளிவு, இழுத்துக்கட்டிய மொழி சார்ந்த வெளிப்பாடு இவரது கவிதை இயல்புகள்.
“பரதேசி” – பணம் வேண்டி வாழ்வின் அற்புத தருணங்களை இழக்கும் ஒருவனை இக்கவிதையில் காட்டுகிறார் கோபி.