Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, 15 January 2020

பொங்கல் நல்வாழ்த்துகள் - 2020

கரும்பை கடித்துத் தின்னும்

திராணி இழந்தோம்.

பனைகளை சூலைகளுக்குத் தநது விட்டு

கிழங்குகளுக்கு அழைந்தோம்.

மஞ்சள் கிழங்கின் உரிமையை மாற்றான்

உரிமை கொண்டாடும் வரை உறங்கினோம்.

வயலோர பொங்கல் பூவைப்

பொக்கைப் பூவாக்கி வாங்கி வந்தோம்.

உணவிட்டவனின் வயிற்றுப்பசிக்கு

வயல் எலிகளைக் கொடுத்தோம்.

வீரம் போற்றும் விளையாட்டை நடத்த

 நீதிமன்ற படிகளில் காத்திருந்தோம்.

பழையன கழிதல் என

பொங்கலை அழுக்காக்கினோம்.

இருந்து விட்டுப் போகட்டுமே  என

நீ சொல்கிறாய்.


நானும் ஆமோதிக்கிறேன்

"பொங்கல் நல்வாழ்த்துகள்" என்ற ஒற்றை வரியோடு!


Saturday, 21 May 2016

தகுதி

தொண்டர்கள் சூழ 
சிலைகளுக்கு மாலையிட்டவனுக்குத் 
தோன்றாமலே போனது.
அடுத்த முறையேனும்
அதற்காகத் தன்னை
தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 
எண்ணம் மட்டும்!

நன்றி : முத்துக்கமலம்.காம்

Saturday, 7 May 2016

பிரிவிலிருந்து!

விசாரிப்புகளோடும், கைகுலுக்களோடும்

துளிர்க்கத் துவங்கியிருந்த நட்பை

தகர்த்தெறிந்ததது முள்ளாய் நீண்ட முரண்.

 

முள்ளின் முனை முறிக்கச் செய்த முயற்சிகள்

காற்றுக் குமிழிகளாய்

தன்னைத் தானே மாய்த்துக் கொண்டன.

Sunday, 1 May 2016

சலனக் கிரீடம்

"சலனக் கிரீடம்" மின் நூலில் "மூன்றடி ஆரவாரங்கள் " என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள மூன்றடிகளுக்கு கவிஞர் இரா.இரவி எழுதி உள்ள அணிந்துரை -

-----------------------------------------------------------------------------------

நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி அவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருபவர் .இவரை நேரில் சந்தித்தது இல்லை. இவரது படைப்புகளை தமிழ் ஆதர்ஸ் டாட் காம் இணையம் உள்ளிட்ட பல்வேறு இணையங்களில், இதழ்களில் படித்து இருக்கிறேன்அவரும் என் படைப்புகளை படித்து இருக்கிறார்அலைபேசி வழி தொடர்பு கொண்டு அணிந்துரை வேண்டினார்எழுதி உள்ளேன்ஹைக்கூ கவிதை படைக்கும் ஆற்றல் இன்று உலக அளவில் பரவி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல் .

சலனக்கிரீடம் என்ற நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. மலர்க்கிரீடம், முள் கிரீடம் கேள்விப்பட்டு இருக்கிறோம். சலனக்கிரீடம்  இப்போதுதான் கேள்விப்படுகிறோம்புதிய சொல்லாட்சி பாராட்டுக்கள். மூன்றடிகளில் ஒரு ஆரவாரம் என்பது முற்றிலும் உண்மை.