மு. கோபி சரபோஜி
என் இளைப்பாறலின் தடங்கள்...
Thursday 29 August 2013
கலியுக மணிமேகலை
பிச்சை
பாத்திரத்தில்
அன்னம்
ஏந்தி
வந்தாள்
சமண
மணிமேகலை
.
பிள்ளை
ஏந்தி
வருகிறாள்
கலியுக
மணிமேகலை
.
நன்றி
:
வார்ப்பு
நம்பிக்கை
வில்லும்
,
கல்லும்
வனமும்
,
கவிதையும்
வந்து
கொண்டே
இருக்கின்றன
.
ஒரு
இராமனாவது
வாழ்வான்
என்ற
நம்பிக்கையில்
!
நன்றி
:
வார்ப்பு
Saturday 24 August 2013
எப்பொழுது?
மழை
இறங்கும்
தருணமெல்லாம்
கவிதைக்காக
வார்த்தைகள்
தேடி
அலைந்து
திரிகின்றாய்
.
எப்பொழுது
இறங்கும்
மழையில்
இறங்கி
மழையாகப்
போகிறாய்
?
நன்றி
:
தமிழ்முரசு
நாளிதழ்
Thursday 22 August 2013
களத்துமேடும், கவளச்சோறும்
நன்றி
:
வளரி
Sunday 18 August 2013
வசைச்சொல்
எவரிடமும்
பறித்து
உண்ணாது
எதன்
பொருட்டும்
வாய்ச்சவடால்
செய்யாது
துருத்தித்
தெரியாத
பாவங்களைச்
சுமக்காது
தன்
சுகமென்பது
கூட
தன்னை
லயிப்பதே
என்றிருப்பவனை
நோக்கி
எப்பொழுதும்
வீசிக்
கொண்டே
இருக்கிறோம்
“
பைத்தியம்
”
என்ற
வசைச்சொல்லை
.
நன்றி
:
திண்ணை
Friday 16 August 2013
நம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை
தினபூமி
நாளிதழின்
வெளியீடான
தினபூமி
-
மாணவர்பூமி
மற்றும்
ஹெர்குலிஸ்
மாத
இதழ்களில்
வெளிவந்த
கட்டுரைகளோடு
கூடுதல்
கட்டுரைகள்
இணைந்து
வெளிவந்திருக்கும்
தொகுப்பு
.
48
சிறு
தலைப்புகளாக
12
பெரிய
தலைப்புகளில்
வரிசைப்படுத்தப்பட்டுள்ள
இந்நூலின்
எந்த
ஒரு
தலைப்பிலிருந்தும்
,
எந்த
ஒரு
பக்கத்திலிருந்தும்
,
முற்றுப்பெற்ற
எந்த
ஒரு
வாக்கியத்தில்
இருந்தும்
வெற்றிப்பயணத்திற்கான
,
சுய
முன்னேற்றத்திற்கான
வழிகாட்டல்களை
உங்களால்
பெறமுடியும்
Thursday 15 August 2013
உருமாறும் வசவுகள்
பத்தாண்டாகியும்
பாலூட்ட
வக்கத்தவளென
சபித்தவர்களின்
வசவுகள்
மலராப்
பூக்களாய்
மலர்ந்த
மலர்களாய்
உவந்த
வார்த்தைகளாய்
உறை
நீங்கா
வாழ்த்துகளாய்
வருடந்தோறும்
உருமாறி
முகம்
பார்க்க
வந்துவிடுகிறது
எவ்வித
குற்றவுணர்வுமின்றி
என்
திருமண
தினத்தில்
.
நன்றி
:
பதிவுகள்
Thursday 1 August 2013
தடம்
புறநகரின்
மனைகள் தோறும்
புதைந்து கிடக்கிறது.
உழுது விதைத்து
உயிர் வளர்க்க
உணவு தந்தவனின்
வறுமை
தடவிய
வியர்வை ரேகைகள்.
நன்றி :
முத்துக்கமலம்
சாமி மரம்
அதுவரையிலும்
பிள்ளையாரோடு
சாமி மரமாய் இருந்தது.
ஓரிரவில்
பிள்ளையார் களவு போக
சாலை விஸ்தரிப்புக்காய்
சாமிமரம் வீழ்ந்தது விறகாய்!
நன்றி :
முத்துக்கமலம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)