Showing posts with label நிலாச்சாரல்.காம். Show all posts
Showing posts with label நிலாச்சாரல்.காம். Show all posts

Wednesday, 8 April 2015

இராமருக்கு அருளிய ஆதிஜெகன்னாதர்

புதிதாக வீடு கட்டும் போது கட்டிட சாமான்களை போட்டு வைப்பதற்காக தற்காலிக குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும் போது அந்த இடத்திற்கு உரியவரிடம் அதற்கான அனுமதியை கேட்போம் இல்லையா? அதுபோல சீதையை மீட்க கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர் கடலரசனிடம் கடல் அலைகலின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாக கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார். அப்படி இராமர் சயனித்திருந்த தலம்திருப்புல்லணைஎன அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவிதிருப்புல்லாணிஎன்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர்தர்ப்பசயனம்என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம்புல்; சயனம்உறங்குதல்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகன்னாத பெருமாள். பஞ்சதரிசன தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகன்னாதர் இங்கு முழுமையாக காட்சி தருவதால் இத்தலம்தட்சிண ஜெகன்னாதம்என்று அழைக்கப்படுகிறது.

Monday, 24 November 2014

வெற்றிக்கு ஐந்து காரணிகள்

கற்றுக்கொள்ளத் தயாராய் இருங்கள் :

எப்பவும், எதையும், எதிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கடந்து சாதிக்கவும், வாழ்வை தன் வசப்படுத்தவும் முடியும். இதற்கென நீங்கள் அதிகமாக மெனக்கெடவோ, உங்கள் மூளையை கசக்கிப் பிழியவோ வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியிருக்கக் கூடியவைகளை, நிகழ்பவைகளை உற்று நோக்கினாலே போதும். ”மாணவன் தயாராய் இருக்கும் போது குரு தானே தோன்றுவார்என்பது கற்றல் விசயத்தில் முற்றிலும் சரியல்ல. இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் வெவ்வேறு வடிவங்களில்., உருவங்களில், அஃறிணையாகவும், உயர்திணையாகவும் குருவானவர் உங்களைச் சுற்றிலும் இருந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார். மாணவனாக நீங்கள் மாறி கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி. குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

Monday, 3 November 2014

காரியம் சாதிக்கும் வித்தை!


நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட செய்ததை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா? என்பதில் தான் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு வெறும் கல்வியறிவு இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய இலட்சியத்தை நோக்கிய முயற்சியில் ஏற்படக்கூடிய சாதக, பாதக சூழ்நிலைகள், பிரச்சனைகள் போன்றவைகளை வெற்றிகரமாக கையாளக்கூடிய திறன்களும் வேண்டும். இந்த திறன்கள் எல்லாம் கல்விநிலையங்களில் கற்றுத்தரும் விசயமில்லை. அதனால் தான் அறிவாளிகளை சர்வசாதாரணமாக உருவாக்கித் தருகின்ற தலைசிறந்த கல்விநிலையங்களால் கூட ஒவ்வொரு முறையும் சில வெற்றியாளர்களைக் கூட உருவாக்கித் தர முடிவதில்லை!

கல்விநிலையங்களிலிருந்துஅறிவாளிகள்என்ற முத்திரையோடு வருபவர்கள் பிறரை தந்திரமாக ஏமாற்றுவது, அடுத்தவர் காலை வாரி விட்டு மேலே வருவது, பிறருடைய திறன், திறமைகளை மறுத்து தன் அதிகார பலத்தால் அடக்கி வைப்பது, பிறருடைய செயல்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களின் மூலம் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதையும், இலட்சியங்களை நோக்கி முன்னேறுவதையும் வெற்றியாக நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில்  வெற்றி என்பது இதுவல்ல!