Showing posts with label அச்சில். Show all posts
Showing posts with label அச்சில். Show all posts

Tuesday, 22 June 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

 தமிழகப் பாளையங்களின் வரலாறு” -  நூலுக்கு தினமலர் விமர்சனம்

நன்றி : தினமலர் நாளிதழ்

 

Tuesday, 20 April 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

[தினமணி கலாரசிகனில்  "தமிழகப் பாளையங்களின் வரலாறுநூலுக்கான  அறிமுகமும் - விமர்சனமும்]

தமிழக வரலாற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது பாளையக்காரர்களின் வரலாறு. அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் போல அரசர்கள் அல்லர். நாயக்கர்களையும், மராட்டிய சரபோஜிகளையும் போல மன்னர்கள் அல்லர். மத வெறியால் நாடு பிடித்த நவாபுகளும் அல்லர். ஜமீந்தார்களை விட சற்று மேலான ஆளுமை உள்ள குறுநிலக்கிழார்கள். அவ்வளவே.

கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பாளையக்காரர்கள். “பாலாறா” என்கிற தெலுங்கு சொல்லில் இருந்து “பாளையம்” என்கிற பெயர் உருவானது. “பாலாறா” என்றால் ராணுவ முகாம் என்று பொருள். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சிக்கு முன்பே தமிழ்கத்தில் பாளையங்கள் சிற்றரசர்களுக்கு உரிய அதிகாரத்துடன் இருந்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.

“ஈரோடு மாவட்ட வரலாறு” நூலில் இடம் பெற்றுள்ள  அம்மைய நாயக்கனூர் ஜமீந்தார் வம்சாவளி ஆவணப்பதிவு தரும் செய்தி இது – “தளவாய் அரியநாத முதலியார் அவர்களும், விசுவநாத நாயக்கரும் இருவருமாக மதுராபுரிக்கு வந்து பாண்டியன் முன்னர் போர் புரிந்த கோட்டையைச் சுற்றி விசாலமாய் 72 கொத்தளங்களைக் கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரர்களையும் நேர்முகம் செய்கிறது”.

Monday, 11 May 2020

நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்

வாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர். தாங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து அறிமுகங்களைச் செய்து வருகின்றனர். இப்படி நீட்டப்படும் பட்டியல்களாலும், செய்யப்படும் அறிமுகங்களாலும் என்ன பயன்? புத்தகங்களுக்கான அறிமுகங்கள் விமர்சனமாகுமா? என்ற எதிர்வினையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நூலுக்கான அறிமுகம் என்பது வெறும் அட்டைப் படத்தை தொடர்ந்து ஒரே நிலையிலோ அல்லது பல்வேறு நிலைகளிலோ ஊடகங்கள் வழியே தொடர்ந்து பதிவிட்டு டிரண்டிங்காக மாற்றி அதன் மீது கவனத்தைக் குவிய வைப்பது. இதை படைப்பாளி தனிப்பட்ட முறையில் செய்கின்றான். அல்லது படைப்பாளியின் நண்பர்கள், பதிப்பாளர் ஆகியோர் செய்கின்றனர். சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய புத்தகங்கள் என ஒரு பட்டியல் போட்டிருந்தார். சற்றே உற்று நோக்கி வாசித்த போது அந்த புத்தகப் பட்டியலில் இருந்த அத்தனை புத்தகங்களும் அவர் எழுதி வெளியிட்டவைகள். புத்தக அறிமுகத்தில் இது ஒரு வகை. இன்னொன்று படைப்பாளியின் நண்பர்கள், அல்லது சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி வாசித்த வாசகர்கள் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பை அல்லது நூலின் சில அம்சங்களை அடையாளப்படுத்தி அந்தப் படைப்பை அறிமுகம் செய்வது இன்னொரு வகை. இலக்கிய விமர்சனம் என்பது நீர்த்துப் போய் விட்ட நிலையில் இவ்விரு வகைகளில் செய்யப்படும் அறிமுகங்கள் தான் ஒரு படைப்பை தெரிந்து கொள்ளவும், புத்தக விற்பனையை தூக்கி நிறுத்தவும், பதிப்புத் துறைக்கு வரும் புதியவர்களுக்கு நம்பிக்கைக் கீற்றாகவும் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது