Monday 20 June 2016

வாசல்கள் திறந்திருக்கட்டும்!

உங்களுடைய பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காண்பது ஒரு வகை எனில் உங்களைச் சுற்றியிருப்பவர்கள், உங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தீர்வுகளைப் பெறுவது இன்னொரு வகை. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்? என்னை விட இவன் அறிவாளியா? என் படிப்பென்ன? இவன் படிப்பென்ன? இவனுக்கெல்லாம் இதைப் பத்தி சொல்ல என்ன அறுகதை இருக்கு? என்பன போன்ற அகங்கார கேள்விகளால் அத்தகைய தீர்வுகளை பல நேரங்களில் பெறாமலே போய்விடுகின்றோம். ஆனால் வெற்றியாளர்களும், அதற்கான முயற்சிகளில் இருப்பவர்களும் ஒரு போதும் அப்படி செய்வதில்லை. தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வுகளை மட்டுமே அவர்கள் பார்க்கின்றனர். அது யாரிடமிருந்து வருகிறது? யார் சொன்னார்கள்? என்றெல்லாம் பார்ப்பதில்லை.

Thursday 16 June 2016

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன் வைத்து விடை தேட முயன்ற போது அதற்கானக் காரணங்களைத் தேடி மனம் கடந்த காலங்களுக்குள் நுழைய ஆரம்பித்தது. பாரதி எடுத்துக் கொண்ட சுய உறுதி போலஎழுத்து எமக்குத் தொழில்என்ற உறுதிப்பாட்டோடு எல்லாம் எழுத வரவில்லை என்ற போதும் எழுத்து எனக்கு வசப்படுவதைக் கண்டடைந்த பருவம் நினைவில் இருக்கிறது. பள்ளிக் காலத்திலேயே வாசிப்புப் பழக்கம் இருந்தது. இலக்கிய வாசிப்பெல்லாம் இல்லை. கையில் கிடைக்கும் புத்தகத்தை, இதழ்களை வாசிப்பது என்ற அளவில் மட்டுமே! கல்லூரியின் இறுதி ஆண்டில் அந்த வருட ஆண்டுமலருக்காக படைப்புகள் கேட்ட போது ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தது தான் முதல் எழுத்து. அது ஆண்டுமலரில் வந்ததும் நண்பர்கள் சிலாகித்ததைத் தொடர்ந்து எழுதிப் பார்த்த கவிதைகள்  நாட்குறிப்பேட்டிற்குள்ளேயே கிடந்து தவித்தன.

Sunday 12 June 2016

தேவதைகளின் அட்டகாசம் - 9

இன்னைக்கு அபி என்ன செஞ்சான்னு தெரியுமா டாடி?

சொன்னாத் தானே தெரியும்.

நானும், அம்மாவும் பாத்ரூமுக்குக் குளிக்கப் போனோம். இவன் அந்த சைடு நின்னு விளையாடிக்கிட்டு இருந்தான். இரண்டு GIRLS இருக்குற இடத்துல ஒரு BOY க்கு என்ன வேலை? அந்தப் பக்கமா போடான்னு சொன்னேன் டாடி. அதுக்கு அவன் ஒரு BOY இருக்குற இடத்துல இரண்டு GIRLS க்கு என்ன வேலைன்னு சொல்லிட்டு டிரெஸ் எல்லாம் எடுக்காமல் குளிக்கப்போறேன்னு பாத்ரூமுக்குள்ள போய் நின்னுக்கிட்டு எங்களை வெளிய போகச் சொல்லி சண்டை போட்டான் டாடி

திருப்பி நீங்களும் சண்டை போட வேண்டியது தானே?

Thursday 9 June 2016

பிரச்சனைகள் தரும் தீர்வுகள்

தன்னுடைய கடன் சுமை, நோய், வாழ்க்கைச் சிக்கல், தனக்கு பிறர் செய்த நம்பிக்கைத் துரோகம் என எல்லா பிரச்சனைகளையும் மூட்டையாக கட்டிக் கொண்டு அவ்வூரிலிருந்த மகானிடம் ஒருவன் வந்தான். தன் மூட்டையிலிருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அவரிடம் அழுது புலம்பினான்.

அவன் கூறியவைகளைக் காது கொடுத்துக் கேட்ட அந்த மகான், “அன்பனே! என்னால் உன் பிரச்சனைகளைக் கேட்க மட்டும் தான் முடியுமேயொழிய வேறு எந்த உதவியும் செய்ய முடியாது. வேண்டுமானால் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன். அதோ அந்த அறைக்குள் உன்னைப் போலவே பிரச்சனை மூட்டைகளோடு வந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். அங்கு சென்று உன் பிரச்சனை மூட்டையை யாரிடமாவது கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து வேறு ஒரு சிறிய மூட்டையை பெற்றுக்கொள்ள முயற்சி செய்என்றார்.

Saturday 4 June 2016

புலம்பல்களை புறந்தள்ளுங்கள்

எனக்கு மட்டும் அந்த ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் செய்திருப்பேன் தெரியுமா? யாருக்கெல்லாமோ வாய்ப்பு கிடைக்குது. எனக்கு ஒன்னும் அமையவே மாட்டேங்குது……..என புலம்பிக் கொண்டே வருடங்களை நாட்களால் கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கையும் புலம்பல்களாகத் தான் இருக்கும். சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி வர வேண்டுமானால் முதலில் இந்த வெற்று புலம்பல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.

வெற்றி பெறுவதற்கும், உங்களை மற்றவர்கள் முன் அடையாளப்படுத்திக் கொள்வதற்குமான சூழலும், வாய்ப்புகளும் தானாக அமையாது. சிலருக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான வாய்ப்புகளும் அதற்கான சூழலும் சம்பந்தப்பட்டவர்களால் அமைத்துக் கொள்ளப்படுகின்றன என்பதே உண்மை. இந்த உண்மையை, எதார்த்தத்தை உணராமல் உட்கார்ந்திருப்பீர்களேயானால் காலம் உங்களின் கனவுகளை பகல் கனவாக்கி விட்டு போய்விடும்.