Tuesday 24 February 2015

ரசிக்க – சிந்திக்க – 5

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். அப்போது லிங்கன் தன்னுடைய காலணிகளுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ட அந்த நண்பர் லிங்கனை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என சுட்டிக்காட்டி மட்டம் தட்டும் நோக்கத்துடன், ”மிஸ்டர் லிங்கன், “உங்கள் காலணிகளுக்கு நீங்களே பாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்என்று கேட்டார்.

Monday 23 February 2015

சிங்கப்பூர் - 50

சிங்கப்பூரின் பழைய பெயர்டெமாசெக்”.  13 ம் நூற்றாண்டில் (1390 ம் ஆண்டு) ஸ்கந்தர் ஷா என்னும் பாலம்பாங்க் மன்னன் தான் தோற்றுவித்த சிறு காலனிப் பகுதியான சிங்கப்பூருக்கு இப்பெயரை இட்டான்.

சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி ஊராகக் குறிக்கப்பட்டுள்ளசிங்கபுரம்என்ற பெயரால்சிங்கப்பூர்என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக 14 ம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதிகள் சோழ மண்டலத்தின் ஆளுகையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர்.

14 ம் நூற்றாண்டில் சுமத்திராவில் இயங்கிய விஜய நகரப் பேரரசின் ஆட்சியில் இருந்ததுமாசிக்நகரமே 15 ம் நூற்றாண்டில்சிங்கப்பூர்எனப் பெயர் மாற்றம் கண்டதாக மலாய் வரலாறு கூறுகிறது

14 ம் நூற்றாண்டில் சுமத்திரா தீவின் மலாய் இளவரசர் சாங்நிலா உத்தமா கடும் புயல் ஒன்றின் போது இப்பகுதியில் ஒதுங்கியதாகவும் அப்போது சிங்கம் போன்ற ஒரு மிருகத்தைப் பார்த்ததும் சிங்கம் என நினைத்துசிங்கப்பூராஎன்றழைத்ததாகவும் மலாய் நாடோடிக் கதை கூறுகிறது. சிங்கம் என்ற சொல்லோடு ஊர் என்ற பொருள் தரும் பூரா என்ற மலாய் சொல்லை இணைத்து இளவரசர்சிங்கப்பூராஎன்றழைத்ததாக கூறுகின்றனர்.

Tuesday 17 February 2015

புகைப்படம் - 12

 புத்தகக் கண்காட்சியில் நண்பரின் மகள் என் நூல்களுடன்

Monday 16 February 2015

புகைப்படம் - 11

கவிமாலைகவி அரங்கில்


ரசிக்க – சிந்திக்க - 4

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு பிரச்சனை. அங்கிருந்த வரலாற்றுத் துறைக் கட்டிடம் அமைந்திருந்த புல் தரையின் மீது  அங்கு படிக்கும் மாணவர்கள்  கேண்டீனுக்குச் செல்லும் போதெல்லாம் கண்டபடி நடந்து சென்றார்கள். அதனால் புற்கள் அழிந்து திட்டுத் திட்டாகி புல்தரையே அலங்கோலமாக மாறிக் கொண்டிருந்தது. புல்தரை மீது நடக்காமல் கேண்டீனுக்குச் செல்ல வேண்டுமானால் அரை கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் புல்லின் மீது நடந்து செல்லக் கூடாது என பேராசிரியர்கள் கூறியதை மாணவர்கள் கேட்கவில்லை