Thursday 12 July 2018

வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!

ஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறான்என்போம்.  அதேபோல, ஞானிகள், யோகிகள், முனிவர்கள் தவநிலையில் இருப்பதைக் கண்டுஇனி ஒரு பிறவி வேண்டாம் என இறைவனை வேண்டி தவமிருக்கிறான்என்போம். மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? இந்தப் பிறவிக்கு முன் எப்படி இருந்தோம்? இந்தப் பிறவிக்குப் பின் எப்படி இருப்போம்? என்ற கேள்விகளுக்கான பதிலில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றாலும் ஆத்மாவானது பல நிலைகளில் பிறவி எடுக்கிறது என்பதில் ஒத்த கருத்துடன் தான் இருக்கிறோம்.