Saturday 9 January 2016

புகைப்படம் - 20

கவிஞர் சீர்காழி செல்வராஜு, கலாப்ரியா, மேஜர் மஜீத்  ஆகியோருடன்


Friday 8 January 2016

ரசிக்க - சிந்திக்க - 15

தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்ட எழுத்தாளர் டால்ஸ்டாய் அவனை தடுத்து நிறுத்தி அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் ஐயா….நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க நினைக்கிறேன். ஆனால் அதற்கான மூலதனம் என்னிடமில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டு சாக முடிவெடுத்தேன் என்றான். உடனே டால்ஸ்டாய், நான் உனக்கு நூறு ரூபிள் (இரஷ்ய நாணயத்தின் பெயர்) தருகிறேன். அதற்கு பதிலாக உன் ஒரு விரலைத் தருகிறாயா? என்று கேட்டார். இளைஞன் முடியாது என வேகமாக மறுத்தான். சரி…..….விரல் வேண்டாம். இரண்டு கண்களில் ஒன்றைக் கொடு என்றார். அப்போதும் அந்த இளைஞன் மறுத்தான். நூறு ரூபிளுக்கு பதில் ஆயிரம் ரூபிள் தருகிறேன். அதற்கு பதிலாக உன் இரண்டு கால்களில் ஒன்றைக் கொடு என்று கேட்டார். அப்போதும் மறுத்த இளைஞனிடம் டால்ஸ்டாய் உன்னிடம் மதிப்பிட முடியாத உடல் உறுப்புகள் என்னும் மூலதனம் இருக்க எதுவுமில்லை என தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாயே? என்று கேட்டதும் அந்த இளைஞன் தன் முடிவை நினைத்து தலைகவிழ்ந்து நின்றான்.

Monday 4 January 2016

பைத்தியம் என்றானவர்

திருப்பங்கள் நிறைந்த வாழ்வில் எல்லா நிகழ்வுகளும் இனிமையானதாக அமைந்து விடுவதில்லை. சில வாழ்க்கையைத் தலைப்பிரட்டையாகப் புரட்டிப் போட்டு விடுவதும் உண்டு. கால்களை நனைக்க விரும்பும் கடல் கொஞ்சம் மிரண்டு வந்தால் விலகி ஓடுவோமே அதுபோல வாழ்க்கையில் நம்மைக் கடந்தும், கடத்தியும் போகும் நிகழ்வுகள் கொஞ்சம் மிரட்சியாக அமையும் போது வாழ்வின் மீதான கேள்விக்குறிகளின் முனைகள் இன்னும் நீண்டு விடுகிறது. அப்படித் தன் முனைகளின் நீளத்தை எனக்குள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வை என்னுள் அந்த இரவுப்பொழுது நிகழ்த்திக் காட்டியது.

சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் ஒருநாள் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இடைநிறுத்தப் பேருந்திற்காக  பேருந்து நிலையத்தின் இருக்கையில் மனைவியோடு காத்திருந்தேன். இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்ததால் சாலையில் வாகனங்கள் குறைவாகவே இருந்தன. பேருந்திற்காக சிலர் காத்திருந்தனர். ஓரிரண்டு இரவு நேரக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் சாத்தபட்டிருந்தது நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே சாலையின் மறுபக்கத்தில் இருந்த மின் கம்பத்தில் பெரிய சோடிய விளக்குகள் திசைக்கொன்றாய் வெளிச்சத்தை இறைத்துக் கொண்டிருந்தன.