Wednesday 26 February 2014

விளைநிலம்

(சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசுக்கு தேர்வான கவிதை )

 

 விளைந்த நிலமாய் - விளையும் நிலமாய்

இருப்பவைகளை நாகரீக வாழ்வுக்காய்

விலை நிலமாய் மாற்றி அமைத்தோம்.

 

சர்ப்பத்தின் புணர்வுபோல

அடி பெருத்து நுனி சிறுத்த கல்மரத்தை

விளைநிலம் தோறும் நட்டு வைத்தோம்.

 

முப்போகம் விளைய வைத்து

உணவிட்டவனின் தற்கொலைக்கு

கணிணியில் கையறு நிலை பாடினோம்.

Monday 24 February 2014

புகைப்படம் - 1

கவிமாலை அரங்கில் சிங்கப்பூரின் மூத்த படைப்பாளி .பி. ராமன் அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது


Sunday 23 February 2014

நானும்.....நானும்

 தற்கொலை செய்து கொள்என்ற தலைப்பில் இக்கவிதைஇன்மை இணைய இதழில் வெளிவந்தது
 நன்றிதமிழ்முரசு நாளிதழ்

               இன்மை

                            

Wednesday 12 February 2014

பாராட்டின் பலம்

என் முதல் நூலை வெளியீடு செய்ததோடு மட்டுமில்லாமல் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியவரும், வணிகரீதியில் என் முதல் பதிப்பாளருமான திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் மணிவிழா சிறப்பிதழலில் அன்பின் அடையாளமாய் நான் எழுதிய கட்டுரை.

லேனா தமிழ்வாணன் சாரை முதன் முதலில் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். ஒரே நேரத்தில் தொண்டையை அடைக்கும் துக்கமும், பீறிட்டு வெளிக் கிளம்பும் சந்தோசமும் கலந்து ஒரு காக்டெயிலாய் எனக்குள் அந்த சந்திப்பு ததும்பி நிற்கிறது. அதனால் தான் ஆண்டுகள் பலவாகியும் அதன் ஈரம் இன்னும் காயாமல் என்னுள் இருக்கிறது.

என்னுடைய நான்கு நூல்களை மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிருந்த சூழலில் துபாயில் தமிழ் அமைப்பு ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த லேனா சாரை சந்திக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. ரவி தமிழ்வாணன் சார் தான் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு, என்இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்என்ற நூலை லேனாசாரின் கரங்களால் விழா மேடையில் வெளியிட ஏற்பாடும் செய்திருந்தார். அப்பொழுது நான் துபாயில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளஅல்- அய்ன்என்ற இடத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.