(சிங்கப்பூரில் இயங்கும் “கவிமாலை” என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசுக்கு தேர்வான கவிதை )
விளைந்த நிலமாய் - விளையும் நிலமாய்
இருப்பவைகளை நாகரீக வாழ்வுக்காய்
விலை நிலமாய் மாற்றி அமைத்தோம்.
சர்ப்பத்தின் புணர்வுபோல
அடி பெருத்து நுனி சிறுத்த கல்மரத்தை
விளைநிலம் தோறும் நட்டு வைத்தோம்.
முப்போகம் விளைய வைத்து
உணவிட்டவனின் தற்கொலைக்கு
கணிணியில் கையறு நிலை பாடினோம்.