Wednesday, 30 August 2017

வார்த்தைகளும், வடுக்களும்...

பணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா? குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்க வேண்டுமானால் உங்களிடம் எப்பொழுதும் வார்த்தைச் சிக்கனம் என்ற வயாகரா இருந்து கொண்டேயிருக்க வேண்டும்

எந்த மனைவியாது, “தொண, தொணன்னு பேசி நச்சரிக்காதீங்க”, “பேசிப் பேசியே கழுத்தை அறுக்காதீங்கஎன கணவனைச் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல வீடுகளில் மனைவி கணவனின் காதோடு காது வைத்துகல்லுளிமங்கா”, “வாழைப்பழ சோம்பேறி”, “அழுத்தக்காரா”, “ஊமைக்கொட்டான்எனச் செல்லமாக உசுப்பேற்றி, உசுப்பேற்றியே பேச வைக்கின்றனர். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. கணவனுக்கும், மனைவிக்கும் சேர்த்து பேச வேண்டும் எனச் சொன்னால் கூட அசராமல் பேசுவார்கள். ஒரு ஜோக். ஒரு பையன், “என்ன தலைப்பு கொடுத்தாலும் அதைப்பற்றி ஒரு மணிநேரம் எங்க அம்மாவால் பேச முடியும் என்றான் பெருமையாக. உடனே அவனின் நண்பன், “இது என்ன பிரமாதம். எந்த தலைப்பும் இல்லாமலே ஒருநாள் முழுக்க கூட என் அம்மாவால் பேசமுடியும். உனக்கு சந்தேகம்னா எங்க அப்பாவைக் கேட்டுப் பாரேன்என்றான். பேசுவதற்காகவே பிறந்தவர்கள் பெண்கள். அது அவர்களின் குணம்

Friday, 28 July 2017

மாற்றம் – முன்னேற்றம் - வெற்றி

பிரபஞ்சத்தின் கோடான கோடி உயிர்களில் நீங்களும் ஒருவர்நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்ய முடியும். மற்றவர்கள் வேண்டுமானால் வழிகாட்டலாம். ஆலோசனை தரலாம். ஆனால் மாற்றிக் கொள்வதும், மாறுவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அரசியல் முழக்கம் போலமாற்றம்முன்னேற்றம்வெற்றிஎன்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மட்டுமல்ல உங்களின் இலக்கினை நோக்கியும் முன்னேற வைக்கும்.

Monday, 24 July 2017

முடியும் என்ற நம்பிக்கை

கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கஷ்டம் என்பதைப் போலமுடியும்என்பதை விடமுடியாதுஎன்று சொல்வது இன்று ஈசியான செயலாகி விட்டது. எல்லோருக்குமானதைத் தனக்கானதாக ஏற்றுக் கொள்ளாதவர்களே வெற்றியாள்ர்களாக மிளிர்கின்றனர் என்ற விதி இங்கும் பொருந்திப் போகிறது. என்னால் முடியாதுஇயலாதுசாத்தியமில்லைவாய்பே இல்லை என்பதை எந்த நிலையிலும் வெற்றியாளர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை. மாறாக தாங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் முடியும்இயலும்சாத்தியம்வாய்ப்புண்டு என்று மாற்றி அமைக்கின்றனர்.

எந்த ஒன்றை ஆரம்பிக்கும் போதும் அதை முடியும் என்று சொல்பவர்களை விட முடியாது என்று சொல்லி எதிர்மறை எண்ணங்களை நமக்குள் கடத்த நினைப்பவர்களுக்கு பஞ்சவே இருப்பதில்லை. அதற்காக அவர்கள் உங்கள் முன் வைக்கும் காரணம் மிகச் சரியாகப் பொருந்துவதாய் தெரியும். விட்டு விடலாம் என்ற மனநிலையை உருவாக்கும். அதில் சிக்காமல் தப்புகிறவர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கின்றனர். மாறாக, அதற்குள் அகப்பட்டுக் கொள்பவர்கள் தங்களின் இலக்கில் இருந்து பின் வாங்கி விடுகின்றனர். இது போதும் என நிறைவு கொள்கின்றனர். வெற்றியாளர்களாக மாற நினைப்பவர்கள் அப்படி நின்று விடுவதில்லை. அவர்கள் மற்றவர்களை விடத் தன்னை மட்டுமே முழுமையாக நம்புகிறார்கள். அதனால் ஒருவேளை தோல்வி ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். காரணம் சொல்பவர்கள் காரியங்களைச் செய்வதில்லை. காரியம் செய்ய முனைந்தவர்கள் காரணங்களுக்காகப் பின் வாங்குவதில்லை. அதற்காக தங்களின் நேரம் முழுமையையும் கொடுத்துப் பாடுபடுகின்றனர்.