Thursday 1 May 2014

இன்னொரு புரட்சி


மேதைகளின் வழிகாட்டல்களில்
உழைப்பாளர்களாய் ஒன்றுபட்டோம்.
 
முதலாளித்துவத்தின் முகமூடிகளை
நம் தோள் வலிமை கொண்டு
கிழித்தெறிந்தோம்.
  
கண்ணீர் சிந்தியே
பழக்கப்பட்ட நாம்
செந்நீர் சிந்தி
ஜெயித்துக் காட்டினோம்.


வியர்வையின் விளைச்சலை
நாடுதோறும் நட்டு வைத்தோம்.

எல்லைகள் கடந்து
எதிரிகள் மறந்து
மே தினமாய் - நம்மை
அடையாளமிட்டுக் கொண்டோம்.


அன்று
வீரியமாய் நின்ற அடையாள தினமோ
இன்று
வெறும் விடுமுறை தினமாகிப் போனது.

விடுமுறையும்

வாழ்த்தும் போதுமென 
வீரிய வித்துக்களை 
அழுகச்செய்து விட்டோம்.

நடந்தவை உணர்ந்து
நடப்பவை அறிந்து
இனி ஒரு புரட்சிக்கு தயாராவோம்

அது இன்னொரு
மே தினமாய் இல்லாமல்

நம்மை  
மேம்படுத்தும் தினமாய் இருக்கட்டும்.

நன்றிவல்லமை.காம்