
மழை விட்டும் தூவானம் விடாத கதையாய் வலைப்பதிவர் திருவிழா முடிந்து இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அது சார்ந்த பதிவுகள் வலைப்பக்கங்களை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. இதுவே அந்நிகழ்வின் வெற்றியைச் சொல்வதற்கான சாட்சியாகிறது. இருந்த போதும் ஆதரவும், எதிர்ப்புமாய் எழுந்த குரல்கள் சில முன்னெடுப்புகளுக்கும், அடுத்த நிகழ்விற்கான தயாரிப்புகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த வழிமுறைகளை முன் நிறுத்தியவர்கள் அதை எவருக்கும் உறுத்தலின்றிச் செய்திருந்தால் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கும். ”வலைப்பதிவர்களும் குழு மனப்பான்மையோடு செயல்படுகின்றவர்கள்” என்ற வாதத்தை வதங்கிப் போகச் செய்திருக்கும்.