தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்ட எழுத்தாளர் டால்ஸ்டாய் அவனை தடுத்து நிறுத்தி அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் ஐயா….நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க நினைக்கிறேன். ஆனால் அதற்கான மூலதனம் என்னிடமில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டு சாக முடிவெடுத்தேன் என்றான். உடனே டால்ஸ்டாய், நான் உனக்கு நூறு ரூபிள் (இரஷ்ய நாணயத்தின் பெயர்) தருகிறேன். அதற்கு பதிலாக உன் ஒரு விரலைத் தருகிறாயா? என்று கேட்டார். இளைஞன் முடியாது என வேகமாக மறுத்தான். சரி…..….விரல் வேண்டாம். இரண்டு கண்களில் ஒன்றைக் கொடு என்றார். அப்போதும் அந்த இளைஞன் மறுத்தான். நூறு ரூபிளுக்கு பதில் ஆயிரம் ரூபிள் தருகிறேன். அதற்கு பதிலாக உன் இரண்டு கால்களில் ஒன்றைக் கொடு என்று கேட்டார். அப்போதும் மறுத்த இளைஞனிடம் டால்ஸ்டாய் உன்னிடம் மதிப்பிட முடியாத உடல் உறுப்புகள் என்னும் மூலதனம் இருக்க எதுவுமில்லை என தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாயே? என்று கேட்டதும் அந்த இளைஞன் தன் முடிவை நினைத்து தலைகவிழ்ந்து நின்றான்.
Friday, 8 January 2016
Monday, 4 May 2015
ரசிக்க – சிந்திக்க - 14
ஒரு நாள் குறுகலான ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக நாடக மேதை பெர்னாட்ஷா நடந்து வந்து கொண்டிருந்தார். அதே பாதையின் மறுமுனையிலிருந்து ஒரு முரடன் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது ஷா என்பதை அறிந்து அவன் வேண்டுமென்றே பாதையை மறித்துக் கொண்டு வழிவிடாமல் நின்றான். வழி விடுமாறு ஷா அடக்கமான குரலில் கேட்டார். அதற்கு அவன், “முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லை” என்று கூறி வழியை மறைத்தபடியே நின்றான்.
உடனே ஷா, “முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பது என் பழக்கம்” என்று கூறியபடி பாதை ஓரத்தில் விலகி நின்றார். மூக்குடைபட்ட முரடன் ஷாவை முறைத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
Monday, 27 April 2015
ரசிக்க – சிந்திக்க – 13
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் பொன்விழா கொண்டாடியது. அந்த விழாவில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் கலந்து கொண்டு ”வைரங்கள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவரது உரைக்குப் பின் ஒரு இளைஞன் எழுந்து, “ஐயா, வைரங்களின் தன்மை, குணம், ஒலிச்சிதறல் பற்றியெல்லாம் தெளிவாகச் சொன்னீர்கள். ஆனால், வைரம் செய்வது எப்படி? என்று தாங்கள் சொல்லவில்லையே” என்றார்.
Monday, 20 April 2015
ரசிக்க – சிந்திக்க - 12
தேவாலயத்தில் சொற்பொழிவை முடித்த போதகர் கூட்டத்தில் இருந்தவர்களிடம் “என் அருமைச் சகோதரர்களே! என்னுடன் சொர்க்கத்திற்கு வர விரும்புபவர்கள் கை தூக்குங்கள்” என்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் கையைத் தூக்கினார்கள். இதைக் கண்ட போதகர் அவரிடம், ”நீங்கள் சொர்க்கத்திற்கு வரா விட்டால் நரகத்திற்குப் போக விரும்புகிறீர்களா? என்றார்.
Tuesday, 14 April 2015
ரசிக்க – சிந்திக்க – 11
பெளதீகத்திற்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. இராமனிடம் ஒரு இளைஞன் வேலை கேட்டு வந்தான். நேர்முகத் தேர்வில் இராமன் அவனிடம் பெளதீகம் சம்பந்தப்பட்ட சில கேள்விகளைக் கேட்டார். அந்த இளைஞனுக்கோ விடை தெரியவில்லை. பெளதீகம் தெரியாதவருக்குத் தன்னிடம் வேலை இல்லை எனக் கூறி இராமன் அந்த இளைஞனை அனுப்பி விட்டார். ஏமாற்றத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்த இளைஞன் அறை வாசலில் ஒரு குண்டூசி கீழே கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு வெளியே செல்லப் புறப்பட்டான்.