Tuesday, 31 October 2017

வெற்றிக்கு அச்சாரமிட்ட வெயிலுகந்த விநாயகர்

பல வீடுகளில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகாது. இருவருக்குமான உரசலில் அம்மா பக்கமா? மனைவி பக்கமா? என முடிவெடுக்கத் தெரியாமல் ஆண் விழி பிதுங்கிப் போவான். சில வீடுகளில் இந்த நிலை அப்படியே தழைகீழாக இருக்கும். மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒத்துப் போகாது. அப்பாவா? கணவனா? என முடிவெடுக்க முடியாமல் பெண் பரிதவித்துப் போவாள். மனித குலத்துக்கு மட்டுமே வாய்த்த இப்படியான சிக்கல்களில் சில சமயம் இறைவனும் சிக்கிக் கொள்வதுண்டு

Sunday, 22 October 2017

புனித யாத்திரை புறப்படுவோம்!

மனிதனைப் புதுப்பிக்கக் கூடிய மிகப் பெரிய சக்தி பயணங்களுக்கு உண்டு. அந்தப் பயணத்தை பக்தி சிரத்தையாக புண்ணிய தலங்களை நோக்கி ஒருவன் மேற்கொள்ளும் போது அதுயாத்திரையாகிறது.  
 
ஒவ்வொரு மதமும் தன் மதத்தவர்கள் சென்று வருவதற்கென புனித இடங்களைக் கொண்டுள்ளன. அங்கு  தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தாலும் அக்காலங்களில் அது அத்தனை சாத்தியமாய் இருக்கவில்லை. இன்றோ அத்தகைய நிலைமை இல்லை. அக்காலங்களில் செய்ய வேண்டிய பிரயாத்தனங்கள் இப்போது தேவையில்லை. நவீன வசதிகள் பயணங்களைப் போல யாத்திரைகளையும் எளிமையாக்கி விட்டன. வாகன வசதிகளால் வழித்தடங்களும், பயண நேரங்களும் சுருங்கின. இதனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள முடிகிறது