கடந்த சில தினங்களாகவே எங்களை எட்டி விடாத இரகசியங்களாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய படியே மகனும், மகளும் ஏதாவது பேசிக் கொண்டும், செய்து கொண்டும் இருந்தார்கள். நேற்றிரவு உறங்கிய சில மணி நேரத்தில் படுக்கையறை விளக்குகள் ஒளிர ஆராம்பித்தது. விடிந்து விட்டதா? என்று விழித்துப் பார்த்தால் வாழ்த்துச் செய்தியோடு எங்கள் முன் கேக் விரிக்கப்பட்டு இருந்தது. தன் சேமிப்பில் கடையில் வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளோடு அன்பை வார்த்தை வாழ்த்தாக்கி மகன் கொடுத்தான். தன் காகித வடிவமைப்புகளை தன்னுடைய வார்த்தைகளால் உயிர்ப்புள்ளதாக்கி தன் பங்கிற்கு மகள் கொடுத்தாள்.