Showing posts with label தமிழ் தாத்தா. Show all posts
Showing posts with label தமிழ் தாத்தா. Show all posts

Tuesday, 19 February 2019

ஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.

இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறதுஎன்று மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டவர் .வே.சா. உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்த .வே.சா அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடராமன். ஆனால் அப்பெயரை அவரின் பெற்றோர்களே பயன்படுத்தவில்லை. சாமிநாதன் என்று பெயரிட்டு அழைத்தனர். நண்பர்களோசாமாஎன்றழைத்தனர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணிய சாமிநாதன் என்ற அவருடைய முழுப்பெயர் பின்னர் .வே.சா. என்றானது.

தன் வாழ்நாள் முழுக்க ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து அதைப் பதிப்பிக்க .வே.சா. ஒரு போதும் வருந்தியதில்லை. அதைத் தன் வாழ்நாள் பணியாகவே செய்தார். அவருடைய அந்திமகாலத்திற்குச் சில மாதங்களுக்கு முன், ”உங்களுக்கு மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள்?” என ஒரு பத்திரிக்கை துணையாசிரியர் கேட்டார்.