Showing posts with label மகாகவி மாத இதழ். Show all posts
Showing posts with label மகாகவி மாத இதழ். Show all posts
Wednesday, 7 June 2017
Wednesday, 7 January 2015
Wednesday, 11 December 2013
பிரசவ அரங்கேற்றம்
எங்களை பகலவனாக்க
பராசக்தியிடம் சக்தி கேட்டவனே
உன் இறுதிச்சடங்கில்
உன்னை மொய்த்த ஈக்களை விட
வந்தவர்கள் குறைவாம்
வாசித்த போது வருத்தம் மட்டுமல்ல
கோபமும் கூடவே
எங்கள் முந்தைய தலைமுறை மீது
ஒரு தலைமுறை மீதே
கொண்ட கோபம் தான்
எங்களை முந்நிலும் எழுச்சி பெற செய்தது
நீஏற்றி வைக்க ஆசைப்பட்ட விளக்குகளில்
ஆர்வம் கொள்ள வைத்து
துலங்கி தூண்டச்செய்தது
உன் கனவுகளை நனவாக்கி
கைமாறு செய்ய
நாங்கள் கை கோர்த்தோம்
தனித்து கிடந்த நாங்கள்
தரணி ஆள புறப்பட்டோம்
வீட்டுக்குள் முடக்கி வைத்த
மூடப்பழக்கங்களை உடைத்து
விண்ணுக்கு சென்று வந்தோம்
சாதியின் சாயத்தை
எங்களின் காதலில்
கரைத்து எடுத்தோம்
ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை
என காட்ட
ஆளுமைக்கு வந்தோம்
உன் கனவுகள்
அள்ள அள்ள குறையா அட்சய பாத்திரம்
அதில் சிந்தியதைமட்டும்
செயலாக்க எங்களுக்கு
ஒரு தலைமுறை போதவில்லை
ஆகவே தான்
உன் கனவுகளில்
எஞ்சியதை அர்த்தப்படுத்த
எங்களையே பிரசவித்துக் கொள்கிறோம்
அடுத்த தலைமுறையாய்!
நன்றி : மகாகவி
Subscribe to:
Posts (Atom)