Showing posts with label மெளன அழுகை. Show all posts
Showing posts with label மெளன அழுகை. Show all posts

Saturday, 1 February 2020

மெளன அழுகை - 8

தன் முகநூல் பக்கத்தில் என்மெளன அழுகைநூல் குறித்துவைசாலி செல்வம்எழுதியுள்ள அறிமுக உரை

முகநூல் வழியாக கிடைத்த நண்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தாண்டு பரிசாக எனது இல்லம் தேடி அனுப்பட்ட அன்பு பரிசு.. வீடு மாற்றத்தால் கண்ணில் படாமல் போன சில வாசிப்பு நூல்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு அலமாரியை தூர்வாரிய போது சிக்கிய நூலை இன்று காலை தான் படிக்க அமர்ந்தேன். ஒரு நூல் வாசிப்பு என்பது ஆசிரியரோடு நாமும் அந்த களத்தில் தன்னை மறந்து வசிக்கும் வாழும் தருணங்கள் ஆகும். சில நேரங்களில் அந்த உணர்வு நமக்கும் நிகழ்ந்திருக்கும். அதுபோலவே உணர்ந்தேன் சில இடங்களில். இது கவிதைத் தொகுப்பு நூல்.  

Thursday, 15 December 2016

மெளன அழுகை - 7

சிங்கப்பூரில் வசிக்கும்  பிருந்தா ஆறுச்சாமி என்மெளன அழுகைகவிதை நூலுக்கு முகநூலில் எழுதிய அறிமுகம்

------------------------------------------

இந்த புத்தகத்துடன் 21 புத்தகங்கள் வந்துள்ளது. இது இவரின் மூன்றாவது கவிதை நூல்.

மிகவும் இயல்பு நிலையில் உணர்ச்சிகளை வசப்படுத்துவதும் பரவசமே மு.கோபி சரபோஜி அண்ணாவின் மெளன அழுகை..

சிறிதும் உருவகம் இல்லாமல் நம்மை மெளனத்திற்கும் அழுகைக்குமாக இழுத்துச் செல்லும் நூல்.

எனக்கு நெகிழ்ச்சியில் பல இடங்களில் சொற்கள் இல்லை.

வலிகளின் வேதனைகளும்.

நல்வாழ்த்துகள்  அண்ணா.



Tuesday, 1 December 2015

மெளன அழுகை - 6

என்மெளன அழுகைகவிதைத் தொகுப்பு குறித்து மலேசியாவின் பன்முகப்படைப்பாளிவல்லினம். நவீன் எழுதியிருக்கும் விமர்சனக் கடிதம் -

. நவீன்

அன்புமிக்க மு. கோபி சரபோஜி, முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள்மௌன அழுகைதொகுப்பை வாசித்தேன். பொதுவாகக் கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.

நான் எனது தொடக்ககால கவிதை வாசிப்பை வைரமுத்து, மேத்தாவிலிருந்துதான் தொடங்கினேன். தமிழில் தீவிர இலக்கிய வாசிப்பு எனக்கு அறிமுகமாகும் முன் திருக்குறள்தான் நான் கவித்துவத்தை அறிய உதவியாக இருந்தது. அப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் எந்த அழைப்பிதழையும் பெரும்பாலும் கவனமாக வாசிப்பேன். அதில் அப்படி ஓர் ஆர்வம்.