தன் முகநூல் பக்கத்தில் என் “மெளன அழுகை” நூல் குறித்து ”வைசாலி செல்வம்” எழுதியுள்ள அறிமுக உரை
முகநூல் வழியாக கிடைத்த நண்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தாண்டு பரிசாக எனது இல்லம் தேடி அனுப்பட்ட அன்பு பரிசு.. வீடு மாற்றத்தால் கண்ணில் படாமல் போன சில வாசிப்பு நூல்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு அலமாரியை தூர்வாரிய போது சிக்கிய நூலை இன்று காலை தான் படிக்க அமர்ந்தேன். ஒரு நூல் வாசிப்பு என்பது ஆசிரியரோடு நாமும் அந்த களத்தில் தன்னை மறந்து வசிக்கும் வாழும் தருணங்கள் ஆகும். சில நேரங்களில் அந்த உணர்வு நமக்கும் நிகழ்ந்திருக்கும். அதுபோலவே உணர்ந்தேன் சில இடங்களில். இது கவிதைத் தொகுப்பு நூல்.