Tuesday, 29 September 2015
Monday, 28 September 2015
நினைக்க மட்டுமே முடிகிறது!
தமிழில் இன்னும் நான்கு போர்சன் (PORTION) நடத்தவே இல்லை. அதற்குள் காலாண்டு தேர்விற்கான டைம் டேபிள் சொல்லிட்டாங்க என மகள் சொல்லி வருத்தப்பட்டதாக மனைவி என்னிடம் சொன்னதும், ”இதுல வருத்தப்பட என்ன இருக்கு? நடத்துனதை மட்டும் படிக்கச் சொல்லு. அது போதும்” என்றேன். மகளோ, ”அது எப்படி டாடி.? நூறு மார்க்குக்கு கொஸ்டின் வரும்ல. அப்ப நடத்தாத போர்சன்ல கொஸ்டீன் வந்தா எப்படி அட்டண்ட் பண்றது? என்றாள். இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது?ன்னு நினைத்துக் கொண்டே, ”தேர்வுக்கு முன்னாடி நடத்திடுவாங்கம்மா” என்று சொல்லி வைத்தேன். அதன்பின்னர் அதைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்காமல் இருந்தேன்.
Wednesday, 23 September 2015
உன்னில் இருந்து தொடங்கு!

பண்டைய பாரதத்தில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. அந்தப்புரத்தைத் தாண்டி ஆட்சியாளராக, படைத் தளபதியாக, போர்க்களச் சாரதியாக, அவைக்களப் புலவராக, தூதுவராக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெண்ணைப் பெண்ணாய் போற்றிய பாரதத்தின் இடைக்காலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களாலும், சாதியப் பிளவுகளாலும் மேலெழும்பிய ஆணாதிக்கத்தனத்தால் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் மீது பலவித கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகியவைகளை வீட்டிற்குள்ளேயே கொடுத்து ஒரு குறுகிய சட்டத்திற்குள் அடைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தில் பெண்களைக் கொண்டாடிய சமூகம் அவர்களைப் பூட்டிவைத்து பீடு நடை போடும் குறை சமூகமாய் சுருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டக் களத்தில் நின்ற தலைவர்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.