Showing posts with label கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.. Show all posts
Showing posts with label கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.. Show all posts

Saturday, 29 December 2012

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

கடந்த ஓர் ஆண்டாக எனது மேஜையில் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி” என்ற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். வ.உ.சி.யின் கடைசி நாட்களை கோபி சரபோஜி அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மு.கோபி சரபோஜி ஒரு விசயத்தையும் விடவில்லை. எந்தவித தாக்கத்தாலும் பீடிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி வ.உ.சி..பற்றி பதிவு செய்திருக்கும் அவருக்கு எனது பாராட்டுகள். கோபி சரபோஜியின் புத்தகத்தைப் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டாம். குறைந்தபட்சம் தமிழுணர்வாளர்கள், தேசியவாதிகள் படிக்கவாவது வேண்டாமா? தங்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கவாவது வாங்க வேண்டாமா?
 - தினமணி - கலாரசிகன்

   

Friday, 19 October 2012

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

[தினமணி கலாரசிகனில்  "கப்பலோட்டிய தமிழன் ..சிநூலுக்கான  அறிமுகமும் - விமர்சனமும்]

கடந்த  ஓர்  ஆண்டாக  எனது  மேஜையில் நான்  பத்திரப்படுத்தி  வைத்திருக்கும்  புத்தகம்  ஒன்று   உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய "கப்பலோட்டிய தமிழன் ..சி.' என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். இத்தனை நாள்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதாமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

"
செக்கிழுத்த செம்மல் ..சி.' 18.11.1936 அன்று இரவு 11.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். நான் இந்தப் பதிவை அதே நாளில் அதே நேரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் துயரமும் விழியோரத்தில் திரண்டு நிற்கும் கண்ணீர் திவலைகளுமாகத் தமிழகம் தந்த அந்த மாமனிதனின் நினைவால் நெகிழ்ந்துபோய் இதை எழுதுகிறேன். இந்தத் தருணத்துக்காகத்தான் கடந்த ஓர் ஆண்டாக இந்தப் புத்தகத்தை மேஜையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.