Showing posts with label விகடன் பிரசுரம். Show all posts
Showing posts with label விகடன் பிரசுரம். Show all posts

Thursday, 4 January 2024

வணிகத் தலைமைகொள் - வெற்றிக்கான சூட்சுமப் பெட்டகம்

வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் தாங்கள் ஜெயித்த கதைகளை எழுதி இருக்கிறார்கள். தொகுப்பாக்கி இருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் தன்னம்பிக்கை நூலின் சாயல் தரித்தே இருக்கும். அதில் இடம் பெற்றிருக்கும் கதைகள், உதாரணங்களில் பெரும்பகுதி மறு வாசிப்புக்குரியதாகவே அமைந்திருக்கும். தவிர, வணிகக் கனவை சுமந்து திரிபவர்களுக்கும், அதன் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் வணிகம் செய்வதன் பொருட்டு தங்களையும், ஆரம்பிக்க போகும் தொழிலையும் கட்டமைப்பதற்கான வழிகாட்டல்களை, செயல்படுத்தத் தகுந்த ஆலோசனைகளை தெளிந்த நீரோடையாகக் கொண்டிருக்காது. இத்தகைய குறைகள் இல்லாது ஒரு வழிகாட்டிக் கையேடு உங்களுக்கு வேண்டுமெனில் ராம் வசந்த் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் “வணிகத் தலைமைகொள்தொகுப்பை கையில் ஏந்திக் கொள்ளலாம்.

எந்தத் தொழிலை தொடங்குவது? என்பதை அவரவருக்குரியதாக ராம் வசந்த் விட்டு விட்டார். தொழிலைத் தொடங்கிய பின் அதில் முன்னேறிச் செல்வதற்கான அறி(ற)வுரைகளை தன் அனுபவங்கள் ஊடாக  தொகுப்பு முழுக்கச் சொல்லிச் செல்கிறார். நூலை வாசிக்க, வாசிக்க ஒரு நேரடி வகுப்பில் அமர்ந்து கேட்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அது மிகையில்லை. சந்தேகம் இருப்பின் வாங்கி வாசித்து நுகரலாம்.

Saturday, 5 June 2021

இனி எல்லாம் ஜெயமே – நம்பிக்கையின் உந்து சக்தி!

தன்னம்பிக்கை நூல்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, ஜெயித்தவர்களின் வரலாறுகளைத் தொகுத்து நம்பிக்கை தரும் நூல்கள். மற்றொரு வகை, ஜெயித்தவர்கள் நேரடியாகத் தாங்கள் சாதித்த விதத்தை அனுபவங்களோடு பகிர்ந்து அதன் மூலம் நம்பிக்கை அளிக்கும் நூல்கள். இதில் இந்நூல் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால் நிறுவனங்களின் அதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன்.

வியாபாரத்தில் ஜெயிப்பதற்கான தனிப்பட்ட குணாதிசயங்களை நிறைய கதைகள், வெற்றியாளர்களின் வாழ்வியல், தன் தொழில் முறை அனுபவங்களோடு கலந்து கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வியாபாரம் தொடங்குபவர்களுக்கும், அதில் இருப்பவர்களுக்கும் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வியலுக்கும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது.