Saturday, 15 July 2017

நகர்ந்து கொண்டே இருங்கள்

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும் என்பது சினிமாவில் எழுதப்பட்ட வாழ்வியலைச் சொல்லும் பாடலின் வரி. வாழ்வின் ருசி மட்டுமல்ல வாழ்வும் கூட தேடல்களால் தான் சுவராசியமடைகிறது. தேடல்களோடு இருப்பவர்கள், ”இது என்ன வாழ்க்கை? செக்குமாட்டுத்தனமாய் இருக்கிறதுஎன்றெல்லாம் புலம்புவதில்லை. மாறாக, தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையைத் தேடலின் வழியாக சுவராசியப்படுத்திக் கொள்கிறார்கள். எப்பொழுது தேடலை நிறுத்துகிறீர்களோ அப்பொழுது உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறி போய் விடுகிறது.

Tuesday, 11 July 2017

கனவை நனவாக்குங்கள்

கனவு காணாத மனிதர்களே இல்லை. கனவு என்பது நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த விசயமாகி விட்டது. அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கவே செய்கிறது. இலக்கின் இன்னொரு பெயர் தான்கனவு”. அதை அவரவர் மொழிக்கேற்ப ஆசை, விருப்பம், தேவை என அழைத்துக் கொள்கிறோம். அதன் காரணமாகவே மறைந்த அப்துல் கலாம் தன்னுடைய வாழ்நாள்; முழுக்கப் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி இளையோர்கள் வரைகனவு காணுங்கள்என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இலக்கை எட்டுவதை முன் கூட்டியே மனதிற்குள் காட்சிப் படுத்திப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதையே கனவு என்று மனவியலாளர்கள் வரையறுக்கின்றனர்

Wednesday, 5 July 2017

தோல்வியிலிருந்து வெற்றி

தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தைமன்னிப்புஎன ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த் பேசும் வசனம் போல நம்மில் பலருக்கும் பிடிக்காத வார்த்தைதோல்வி”. அப்படியிருக்க எப்படி தோல்வியிலிருந்து வெற்றி பெற முடியும்? நீங்கள் விரும்பாத தோல்வியை உங்களுக்குப் பிடித்ததாக மாற்றிக் கொண்டால் முடியும். அப்படி மாற்றிக் கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமல்ல.

தோல்வியிலிருந்து பாடம் படியுங்கள். தோல்வியை அனுபவமாக மாற்றுங்கள் என்று எங்கும் பேசுவதைக் கேட்கிறோம். எழுதுவதை வாசிக்கிறோம். ஆனால் அதைக் கடைப்பிடிக்கிறோமா? இந்தக் கேள்விக்கு நம்மில் பலரிடமும் தீர்க்கமான பதில் இருப்பதில்லை, தீர்க்கமான பதில்களை வைத்திருப்பவர்கள் தோல்விகளைக் கண்டு துவள்வதில்லை. அதையேத் தன் அடுத்த முயற்சிக்கான ஆரம்பமாக மாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றனர். அதனால் தோல்வி என்று நீங்கள் நினைக்கும் நிலையை இறுதியாக்கி அங்கேயே முடங்கி விடாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள். உடைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊட்டத்தைப் பெறுங்கள். அப்படி நகர்ந்தவர்களும், பெற்றவர்களும் மட்டுமே சாதித்திருக்கிறார்கள். வெற்றியாளராக தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

Tuesday, 4 July 2017

காதலின் குறியீடு!

  • இந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது.
  • இராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்கிற்குச் சொந்தமான தோட்டமாக இருந்த இந்த இடம் பண்டமாற்று முறை மூலம் வேறு இடங்கள் கொடுத்துப் பெறப்பட்டது.
  • பாரசீக, முகலாயக் கட்டடக் கலை மரபுகளை உள்ளடக்கி தைமூர் சமாதி, ஹிமாயூன் சமாதி, டெல்லி ஜும்மா மசூதி ஆகிய கட்டியங்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு தாஜ்மகாலுக்கான வரைபடம் உருவாக்கப்பட்டது.
  • வெனிஸ் நகரச் சிற்பிவெரொனியோ”, துருக்கி நாட்டு கட்டிடக் கலைஞர்உஸ்தாத் இஷாகான்”, லாகூரைச் சேர்ந்தஉஸ்தாத் அகமதுஆகியோருடன் ஷாஜஹானும் இணைந்து வடிவமைத்த வடிவமைப்பு   தாஜ்மகால்!
  • தாஜ்மகாலைக் கட்டும் பணி 1631 – ல் தொடங்கியது.