Saturday, 28 December 2013

அலமாரி அங்கீகாரங்கள்

விருதுகளாலும், வாழ்த்துக்களாலும்
வரவேற்பறையை 
நிரப்பி நிற்கும் அங்கீகாரங்கள்
படைப்பின் பிரசவத்திற்காய்
வாங்கிய லகரங்களை மீட்க
வருசம் கடந்தும் வாசல் வந்து நிற்கும்
தண்டலின் தவணை தேதிகளில்
அரூபமாய் உணர்த்திக் கொண்டே இருக்கிறது
என் முந்தைய தலைமுறை படைப்பாளிகளின்
பாலை நில வாழ்க்கையை.

Friday, 27 December 2013

வெற்றியை சொந்தமாக்குவது எப்படி?





எந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. இறைவன் எல்லாப் பறவைகளுக்கும் உணவளிக்கிறான். ஆனால், அதைக் கூட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதில்லை. உங்களுக்கான புதையலை நீங்கள் தாம் தேட வேண்டும். தேடும் முயற்சியில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் இந்த நூலை படியுங்கள். உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த உதவும் தூண்டுகோல்களின் சாரம் இந்நூல்!

-
பதிப்பகத்தார்


Thursday, 26 December 2013

மக்கள் மனசு - 3


முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலைபோடும் பக்தர்கள் 48  நாட்கள் கடுமையான விரதத்தை  பயபக்தியோடும்,  புனிதத்தன்மையோடும் கடைப்பிடித்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவார்கள். இப்போது  காலையில் மாலை போட்டு, இரவில் இருமுடிகட்டிக்கொண்டு கோயிலுக்கு செல்பவர்கள் அதிகமாகி  விட்டதால், முன்பு போல் இப்போது யாரும் அவ்வளவு பயபக்தியோடு கோயிலுக்கு செல்வது  இல்லை, பக்தர்களிடம் புனிதத்தன்மை குறைந்து கோயிலின் மகிமை கெட்டு விட்டது என்பது பற்றி.........

பக்தர்களின் புனிதம் போய்விட்டது. ஆலய மகிமை கெட்டுவிட்டது என்பதெல்லாம் சுத்த பேத்தல்!
நன்றி : பாக்யா வார இதழ்