நீங்கள்
என்ன செய்கிறீர்கள்
என்பதை விட
செய்ததை வெற்றிகரமாக
முடித்து விட்டீர்களா?
என்பதில் தான்
வெற்றி, தோல்வி
தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு
வெறும் கல்வியறிவு
இருந்தால் மட்டும்
போதாது. உங்களுடைய
இலட்சியத்தை நோக்கிய
முயற்சியில் ஏற்படக்கூடிய
சாதக, பாதக
சூழ்நிலைகள், பிரச்சனைகள்
போன்றவைகளை வெற்றிகரமாக
கையாளக்கூடிய திறன்களும்
வேண்டும். இந்த
திறன்கள் எல்லாம்
கல்விநிலையங்களில் கற்றுத்தரும்
விசயமில்லை. அதனால்
தான் அறிவாளிகளை
சர்வசாதாரணமாக உருவாக்கித்
தருகின்ற தலைசிறந்த
கல்விநிலையங்களால் கூட
ஒவ்வொரு முறையும்
சில வெற்றியாளர்களைக்
கூட உருவாக்கித்
தர முடிவதில்லை!
கல்விநிலையங்களிலிருந்து “அறிவாளிகள்”
என்ற முத்திரையோடு
வருபவர்கள் பிறரை
தந்திரமாக ஏமாற்றுவது,
அடுத்தவர் காலை
வாரி விட்டு
மேலே வருவது,
பிறருடைய திறன்,
திறமைகளை மறுத்து
தன் அதிகார
பலத்தால் அடக்கி
வைப்பது, பிறருடைய
செயல்களில் தன்னை
அடையாளப்படுத்திக் கொள்வது
போன்ற செயல்களின்
மூலம் தங்களுடைய
நோக்கத்தை நிறைவேற்றிக்
கொள்வதையும், இலட்சியங்களை
நோக்கி முன்னேறுவதையும்
வெற்றியாக நினைத்துக்
கொள்கின்றனர். உண்மையில்
வெற்றி என்பது
இதுவல்ல!