Thursday, 20 June 2019

மாத்தனும் - இல்லைன்னா - மாறனும்!

   மகளுடனான உரையாடலின் இடையே இந்த வருடத்துக்கு ஏதும் ப்ளான் இருக்கா? என்றேன்.

"ஸ்கூல் லீடர் (SCHOOL LEADER) அல்லது ஹவுஸ் லீடர் (SCHOOL HOUSE LEADER) இரண்டில் ஒன்றை பெற்று விட வேண்டும்" என்றாள்

அது என்ன அத்தனை சிரமமா? என்றேன்.

எங்க ஸ்கூல்ல ஸ்கூல் லீடர், ஸ்கூல் ஹவுஸ் லீடரா இதுவரைக்கும் பாய்ஸ (BOYS) மட்டும் தான் போடுறாங்க. அசிஸ்டெண்ட் லீடரா மட்டும் தான் கேர்ள்ஸ (GIRLS) போடுறாங்க. கேர்ள்ஸ்ஸ லீடரா செலெக்ட் செஞ்சா அச்சிவ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறாங்களா? என்றாள்.

இதை நீ ஸ்கூல்ல கேட்க வேண்டியது தானே என்றேன்.

வாய்ப்பே தராத போது நான் பொறுப்பேற்கவான்னு எப்படி நாங்களா கேட்க முடியும்? என்றாள்.

Monday, 18 March 2019

அபி ஆல்பம் - 03

மகன் அபிலேஷின் முதல் முயற்சி தினத்தந்திமாணவர் ஸ்பெஷல்பகுதியில்









Tuesday, 19 February 2019

ஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.

இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறதுஎன்று மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டவர் .வே.சா. உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்த .வே.சா அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடராமன். ஆனால் அப்பெயரை அவரின் பெற்றோர்களே பயன்படுத்தவில்லை. சாமிநாதன் என்று பெயரிட்டு அழைத்தனர். நண்பர்களோசாமாஎன்றழைத்தனர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணிய சாமிநாதன் என்ற அவருடைய முழுப்பெயர் பின்னர் .வே.சா. என்றானது.

தன் வாழ்நாள் முழுக்க ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து அதைப் பதிப்பிக்க .வே.சா. ஒரு போதும் வருந்தியதில்லை. அதைத் தன் வாழ்நாள் பணியாகவே செய்தார். அவருடைய அந்திமகாலத்திற்குச் சில மாதங்களுக்கு முன், ”உங்களுக்கு மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள்?” என ஒரு பத்திரிக்கை துணையாசிரியர் கேட்டார்.