Saturday 7 March 2015

வாழ்வை விருட்சமாக்கும் விதைகள்

  • உனக்குரிய வேலையை முழுமையாகச் செய்.
  • எண்ணம் போல் தான் செயல்.
  • நேரம் பொன் போன்றது.
  • முயன்றால் முடியும்.
  • இலக்கில் தெளிவாய் இரு.
  • தவறான யோசனைகள் அழிவைத் தரும்.
  • செய்கின்ற வேலையில் முழு ஈடுபாடு கொள்.
  • பிறரை முழுமையாக நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதே.
  • பிரச்சனைக்கான தீர்வு அதற்குள்ளேயே இருக்கும்.
  • கவனித்தலில் இருக்கிறது காரிய சாத்தியம்.
  • நாளை என்பது நிச்சயமல்ல.
  • நிகழ்காலத்தில் வாழு.
  • கடந்தகாலத்தைக் கிளறாதே.
  • தீர ஆலோசித்து செயலைத் தொடங்கு.
  • கெட்டவர்களோடு இருக்கும் போதும் நல்லவனாக வாழ முடியும்.
  • பிறர் பொருளின் மீது உரிமை கொண்டாடாதே.
  • பிறர் விரும்ப வேண்டுமானால்நான்என்ற அகந்தையை விடு.
  • பேசும் விதத்தில் பேசினால் எதையும் சாதிக்கலாம்.
  • உன் குறையை உணர்.
  • ஆர்வமே அனைத்திற்கும் அடிப்படை.
  • சுய முயற்சியால் மட்டுமே வெற்றி சாத்தியம்.
  • மறக்க மட்டுமல்ல; மன்னிக்கவும் பழகு.
  • தகுதியானவர்களிடம் யோசனை கேள்.
  • பேச்சை நிறுத்து; செயலைத் தொடங்கு.
  • முதலில் தொடங்கு; தானாகவே அது தொடரும்.
  • வாழ்க்கையை சிக்கலாக்குவதும், சுகமாக்குவதும் உன் கையில் தான் இருக்கிறது.
  • உன்னிடமிருந்தால் மட்டுமே அது நம்பிக்கை.
  • வெற்றி வரும் போது பணிவும் வர வேண்டும்.
  • வெற்றியை எட்ட விடா முயற்சி செய்.
  • வெற்றி, தோல்வியைச் சமமாகப் பாவி.
  • ஒப்பீடுகள் மகிழ்ச்சிக்கு எதிரி.
  • எதிர்ப்புகளைச் சாதகமாக்கப் பழகு.
  • குறைகளை நிறைகளாக்கு.
  • எதற்கும், எப்பவும் தயாராய் இரு.
  • பயம் நீங்காதவரை எந்தப் பயனுமில்லை.
  • அன்பினால் எவரையும் திருத்த முடியும்.
  • அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கையும் ஆபத்தே.
  • சுய சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படை.
  • பிடிவாதமே வெற்றியின் அடிநாதம்.
  • உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே.
  • சரியும், தவறும் கேட்கும் விதத்தில் இருக்கிறது.
  • பிறர் பொறுமைக்கும் எல்லை உண்டு.
  • சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகு.
  • ஒவ்வொரு செயலிலும் விழிப்போடு இரு.
  • பிரச்சனைகள் எதுவுமில்லாமல் வாழ்க்கை இல்லை.
  • நம்பிக்கையின் ஆற்றல் மகத்தானது.
  • பிறருக்காகவும் வாழப் பழகு.
  • போதும் என்ற எண்ணம் உழைப்பிற்குப் பொருந்தாது.
  • ஒருபோதும் பிறரைக் குறை கூறாதே.
  • மற்றவர்களை மாற்ற முயல்வதற்குப் பதில் உன்னை நீயே மாற்றிக்கொள்.
  • பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாதே.
  • அரைகுறை அறிவு ஆபத்து.
  • உன்னை மட்டும் மையப்படுத்தி சிந்திக்காதே.
  • தடைகளைத் தாண்டு.
  • பிறரை மதிக்கவும், பாராட்டவும் ,உற்சாகப்படுத்தவும் தயங்காதே.