Wednesday 11 March 2015

நினைவுகளின் துளிர்ப்பு


தூரத்து வானமாய்

எட்டாமலே போனது

நமக்குள் ஊடேறி கவிழ்ந்திருந்த நினைவுகள்.

கரைசேர வந்த அலையை

அள்ளிச்செல்லும் கடலாய்

நினைவுகளை வாரிக் கொண்டு திரும்பினோம்.

எடுத்துச் செல்லும் வரை தெரியவில்லை

நான் உனக்கானதையும்

நீ எனக்கானதையும் எடுத்துப் போகிறோமென்று.

திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில்

விதையாய் விழுந்திருந்த நினைவுகள்

உச்சரிப்பின் உவப்பில் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது

என் பெயர் தாங்கிய உன் மகனாய்

உன் பெயர் தாங்கிய என் மகளாய்

அவரவர் வீட்டில்!

 

நன்றி : இன்மை.காம்