Monday 9 March 2015

ரசிக்க – சிந்திக்க - 7

இந்தியக் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர். இராதா கிருஷ்ணன் முதன் முறையாக அமெரிக்காவிற்கு சென்ற போது வாசிங்டனில் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தது. காற்று, இருள் இவற்றோடு பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. விமானத்தை விட்டு இறங்கிய இராதா கிருஷ்ணனை வரவேற்ற அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி தங்களுடைய பயணத்தின் போது இங்கே இவ்வளவு மோசமான தட்பவெப்ப நிலை இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.

அதற்கு இராதா கிருஷ்ணன்மிஸ்டர் கென்னடி……….நம்மால் மோசமானவற்றை மாற்ற முடியாது. ஆனால், அது பற்றிய நம் மனக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்என்றார். தத்துவமேதையான இராதா கிருஷ்ணன் கூறிய இந்த மனநிலை தான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியம். அத்தியாவசியம். வெள்ளம், புயல் போல உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தநிகழும்நிகழப்போகும் மாற்ற முடியாத விசயங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட அதற்கு ஏற்ப உங்களையும், உங்கள் மனநிலையையும் மாற்றிக் கொண்டு வாழப் பழகுங்கள்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்