Thursday, 29 June 2017

தன் அனுபவமாக்குங்கள்

இன்றேஇப்பொழுதே - இக்கணமே என்பது வெற்றியாளர்களின் வேதவாக்கு, இதன் உட்பொருள் உங்களின் செயலைத் தாமதிக்காமல் ஆரம்பியுங்கள் என்பதாகும். இதைப் படித்ததும் நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் எனக் கிளம்பினீர்களேயானால் சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுவீர்கள். நடைமுறையில் உணர்ச்சி வயப்பட்டெல்லாம் எதையும் செய்து சினிமாக் கதாநாயகன் போல் ஒரே நாளில் வெற்றியைச் சுவிகரித்து விடமுடியாது. அதற்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவையாக இருக்கிறது

Saturday, 24 June 2017

மனநிலையை மாற்றுங்கள்

எல்லோரும், எப்பொழுதும் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் செயல்களை அங்கிகாரம் செய்ய வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. உண்மையில் அப்படி எதுவும் நிகழ்வதில்லை. உறவுகளுக்கிடையேயான பெரும்பாலான விரிசல்கள் இப்படியான நிராகரிப்புகளாலயே உருவாகின்றன. சாதாரண விசயங்களுக்கே இப்படியான நிலை என்கின்ற போது வெற்றி சார்ந்த முயற்சிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இப்படியான மறுப்புகளைக் கடந்து வெற்றியை வசப்படுத்துவதில் தான் உங்களுடைய அடையாளம், தனித்தன்மை அடங்கி இருக்கிறது.

Wednesday, 21 June 2017

கொஞ்சம் கவனியுங்கள் ஆசான்களே!

விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மகள் விடுமுறையில் செய்து வர வேண்டும் என பள்ளியில் சொல்லி அனுப்பி இருந்த "அசைன்மெண்ட்" களை செய்து முடித்து கத்தை கத்தையாக அடுக்கி வைத்திருந்தாள்.

"லீவுக்கு தந்த எல்லா அசைன்மெண்ட்டையும் முடிச்சிட்டேன் டாடி. இந்தி மட்டும் படிக்க முடியல. ஜி திட்டுவாங்க" என வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள்

லீவுன்னா படிக்கனுமா? ஜி கேட்டா ஊருக்கு போயிருந்தேன்னு சொல்லு" எனச் சொல்லி அனுப்பி இருந்தேன்.

"பள்ளியில் இருந்து திரும்பியவளிடம் முதல் நாள் வகுப்பு எப்படி? அசைன்மெண்டெல்லாம் .கே.யா? "என்றேன்.

Tuesday, 20 June 2017

மூளைதனமும் – தொலைநோக்கும்!


சில வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனம் நடத்திய மேம்பாட்டுத் திறன் சார்ந்த பயிலரங்கில் ஊழியர்களிடம் சில கேள்விகள் அடங்கிய தாள்கள் தரப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனியாகப் பதில்கள் பெறப்பட்டன. அதில் ஒரு கேள்வி. வாழ்வில் முன்னேற என்ன தேவை? மூளைதனமா? மூலதனமா? நான் உள்பட பலரும் எழுதிக் கொடுத்திருந்த பதில் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பதில்கள் பெறப்பட்ட பின் பயிலரங்கை நடத்தியவர் மூலதனம் மட்டும் இருந்தால் வழ்க்கையை வெற்றி பெற்று விட முடியும் என நினைக்கிறீர்களா? என்ற போது கோரசாய் ஏன் முடியாது? என்று கேட்டோம். அப்படியானால் உங்கள் ஊரில் அல்லது உங்கள் உறவினர்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்? என்று அவர் திருப்பிக் கேட்ட போது எங்களிடம் பதில் இல்லை.

Friday, 16 June 2017

பகிர்ந்து செய்யுங்கள்


இலக்கு, திட்டமிடல் ஆகியவைகளில் நம்மில் பலருக்கும் இருக்கும் தெளிவு அது சார்ந்த செயல்களைச் செய்யும் போது இருப்பதில்லை. ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதே இன்று பலருக்கும் தெரிவதில்லை. வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதை எப்படிச் செய்தால் முடிக்க முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தெளிதலும், தெரிதலும் இருந்தால் போதும் வெற்றியை உங்கள் பக்கம் சாய்த்து விட முடியும், அதற்கு உங்களுடைய வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியது அவசியம்.