Showing posts with label மலைகள்.காம். Show all posts
Showing posts with label மலைகள்.காம். Show all posts

Thursday, 26 May 2016

ஒப்பனை முகங்கள்

சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்

ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.

Saturday, 19 December 2015

அப்பாவின் படகு

 

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் கடந்த வருட தனது வாசகர் வட்டச் சிறுகதைகளைஅப்பாவின் படகுஎன்ற பெயரில் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறது. இத்தொகுப்பில் பத்துப் படைப்பாளிகளின் பதினைந்து கதைகள் உள்ளன,

ஒரு படைப்பை வாசிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கும் வாசகன் அதில் தொடர்ந்து பயணிக்க அப்படைப்பானது அவனைத் தன்னுள் இறுத்திக் கொள்ளும் தகவமைப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வலக்கையால் எடுத்ததை இடக்கையால் புறந்தள்ளிப் போய் விடுவான். வாசிப்பாளனின் இந்தப் புறந்தள்ளலை, புறக்கணித்தலை எப்பொழுது ஒரு படைப்பு புறந்தள்ள வைக்கிறதோ அப்பொழுது அந்தப் படைப்பு வெற்றியின் முகத்துவாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இப்படி நிலை நிறுத்தல்களுக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் படைப்பாக இத்தொகுப்பின் கதைகள் சிங்கப்பூரின் வாழ்வியல் சார்ந்தும், சிங்கப்பூரைக் களமாகக் காட்டியும் விரிந்து நிற்கின்றன.

Tuesday, 8 September 2015

அயல் பசி – அற்புத போஜனம்

 

2012 ம் ஆண்டிற்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக அயல் பசியை எஸ். இராமகிருஷ்ணன் தேர்வு செய்திருந்த சமயத்தில் அதன் சில கட்டுரைகளை இணையத்தில் நொறுக்குத் தீனியாய் அசை போட்டிருந்தாலும் எல்லாக் கட்டுரைகளையும் ஒரு சேர வாசித்து ருசிக்க சமீபத்தில் தான் நேரம் வாய்த்தது.

உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் மனித வாழ்வியலுக்கான அடிப்படைச் சாதனங்களாக மட்டுமல்லாமல். மனித குல வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களினால் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளில் உண்டாகிய தாக்கங்களையும், சிதைவுகளையும் வரலாற்றில் பதிவு செய்யும் கருவிகளாகவும் இருந்து வருகின்றன. அத்தகைய கருவிகளுள் ஒன்றான உணவு சார்ந்து வந்திருக்கும் இந்நூல் ஜப்பான், தென்கிழக்காசியா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இருக்கும் உணவு வகைமைகள், அதைத் தயார் செய்யும் முறைகள், பரிமாறும் விதங்கள் உள்ளிட்ட பல தகவல்களைத் தரும் இந்த நூற்றாண்டில் முக்கிய ஆவணம் எனலாம்.

Wednesday, 5 August 2015

அப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும்

கடந்த 27.07.2015 ல் அப்துல் கலாம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி எட்டியதும் தங்கள் வீட்டுத் துயரமாக நினைத்து பகிரப்பட்ட துக்க நினைவுகளோடு விமர்சனம் என்ற பெயரில் சில தகர டப்பாக்கள் போட்ட சப்தங்கள் அவர்கள் நினைத்ததைப் போல ஒன்றையும் புரட்டிப் போட வில்லை. அவர்கள் பாசையிலேயே சொன்னால் ஒரு மயிரையும் புடுங்கவில்லை.

 

  •  இறந்த ஒருவரை ஏன் விமர்சனம் செய்யக்கூடாது? 
  • இறந்தவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? 
  • அவரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன?

இந்த மூன்று கேள்விகளை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்ட பெரும்பாலான விமர்சன வாந்திகளை எடுத்தவர்கள் தங்களைச்  செல்வாக்கு மிக்கவர்களாக, தங்களின் எழுத்து மற்றும் அமைப்புகளின் மூலம் சமூகத்தில் ஒரு மாறுதலை உருவாக்கி வருபவர்களாக எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்காகவே சொம்படி, செருப்படி பட்டவர்களே என்றாலும் அவர்கள்  எழுத இணையத்தில் இடமும், அவர்களுக்கு வடம் பிடிக்க வட்டமும் இருக்கத் தான் செய்கிறது. அந்த இடத்தையும், வட்டத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக என் பார்வைக் கோணமே வேறு என்ற மிதப்பில்   அவ்வப்போது ஊளையிட ஆரம்பித்து விடுவார்கள்.